Sunday 15 July 2018

ஒரவஞ்சனை வேண்டாம்...!

நமது புதிய அரசு இந்தியர்களுக்கு மட்டும் ஓரவஞ்சனை செய்யும் காரியத்தில்  ஈடுபட்டிருப்பதாகவே நமக்குத் தோன்றுகிறது.

சீன சமூகத்திற்கு மட்டும் கல்விக்காக ஒரு துணை அமைச்சரைக் கொடுத்துவிட்டு இந்தியர்களை ஓரங்கட்டிருப்பதாகவே நாம் நினைக்கத் தோன்றுகிறது.

ஆமாம், இதோ பாருங்கள்.  சீன கல்விக்குழுக்கள் துணைக் கல்வி அமைச்சரை சந்தித்து சீன உயர்கல்விக்கு என்ன செய்ய வேண்டுமோ அதனைச் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். நமது நிலை என்ன? நாம் எங்கே ஆரம்பிப்பது? நாம் யாரிடம் நமது பிரச்சனைகளைக் கொண்டு செல்வது?

இனி நாம் மலேசியராக நினைக்க வேண்டும் என்று சொல்லுவது சரி தான்.  அதனால் இந்திய அமைச்சர் தான் நமக்கு வேண்டும் என்று சொல்லுவது சரியில்லை என்பதெல்லாம் கேட்பதற்குக் குளிர்ச்சியாகவே  இருக்கிறது!  அப்படியே அதனை ஏற்றுக் கொண்டாலும்  அப்புறம் ஏன் சீன துணைக்கல்வி அமைச்சர்?  அவர்களுக்கு ஏன் அந்த வாதம் எடுபடவில்லை? 

கல்வி என்று வரும் போது அமைச்சர், இரு துணை அமைச்சர்கள் - சீனம், தமிழ் - என்பது தான் சரியான வழியாக இருக்கும். அதில் ஏதும் தப்பு இருப்பதாகத் தெரியவில்லை.

 ஒரு துணைக்கல்வி அமைச்சர் சீனராக இருப்பதால் தான் சீனக் கல்விக் குழு தனது வேலைகளை எந்தத் தடையுமின்றி  ஆரம்பிக்க முடிகிறது. ஆனால் இந்திய கல்வி அமைப்புக்கள் இன்னும் எதனையும் செய்ய முடியாத நிலையில் கையைப் பிசைந்து கொண்டிருக்கின்றன. சீனக் கல்விக் குழுவுக்கு தனது இன அமைச்சர் என்பதால் உரிமையோடு உறவாட முடிகிறது.  நம்மால் அப்படி எல்லாம் செய்ய முடியவில்லையே!

கல்விததுறை என்பது ஒரு நாட்டிற்கு மிக முக்கியமானத் துறை. அதனை யாரும் அலட்சியப்படுத்த முடியாது. கல்வித்துறையில் நாம் பல பிரச்சனைகளை எதிர் நோக்குகிறோம்.  பாடங்கள் போதிப்பது மட்டும் அல்ல, கட்டடங்கள், ஆசிரியர் பற்றாக்குறை, தனியார் நிலங்களில் தமிழ்ப்பள்ளிகல்,  போன்ற பல பிரச்சனைகளை நம் கண் முன்னே நிற்கின்றன, இவைகளுக்கெல்லாம் தீர்வு காணப்பட வேண்டும்.

கடைசியாக, ஒன்றே ஒன்று தான். நமது பக்காத்தான் இந்திய அரசியல்வாதிகள், தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகளைக்  களைய  ஒர்  இந்திய துணைக்கல்வி அமைச்சர் தேவை என்பதை தங்களது மேலிடத்தில் வலியுறுத்த  வேண்டும். 

ஓரு துணைக் கல்வி அமைச்சர் கிடைக்கும் வரை இது பக்காத்தான் அரசாங்கத்தின் ஓரவஞ்சனை என்பதாகவே நாம் எடுத்துக் கொள்ளுவோம்!

No comments:

Post a Comment