பேராசிரியர் ராமசாமி அப்படி என்ன செய்துவிட்டார்? அவர் மேல் 53 புகார்கள் காவல்துறையில் போடப்பட்டிருக்கிறது என்கிறார் ஐ.ஜி.பி. பூஸி ஹருன்.
இதெல்லாம் சில கும்பல்களுக்கு ஒரு விளையாட்டு மாதிரி! பேராசிரியர் சொன்னதெல்லாம் ஜாகிர் நாய்க் என்கிற இஸ்லாமிய போதகர் அவர் நாடான இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்பது தான். அவர் அனுப்பப்பட வேண்டும் என்பதில் ஒரு நியாயம் உண்டு. இந்தியாவின் குற்றச்சாட்டு என்பது ஜாக்கிர் இஸ்லாமிய தீவிரவாதத்தை வளர்ப்பவர் அத்தோடு பணம் கையாடல் செய்தவர் என்பது தான் அவர் மீது உள்ள குற்றச்சாட்டு.
மலேசியாவில் ஜாக்கிர் ஓரு நிரந்திர குடியிருப்புவாசி. அவரின் சிறப்பு என்பது இங்குள்ள இஸ்லாமிய - இந்து சமயத்தினரிடையே பிரிவினையை ஏற்படுத்துவது! பிரிவினை என்பதை விட இந்து மதத்தைக் கேவலப்படுத்தி இஸ்லாமியர்களை இந்து மதத்தின் மேல் ஒரு வெறுப்பை ஏற்படுத்துவது! இதனை இந்தியாவில் செய்து அவர் செருப்படி வாங்கியவர்! இங்குள்ள இந்துக்கள் அதனைச் செய்ய முடியாது என்பதால் கொஞ்சம் துணிச்சலாகப் பேச ஆரம்பித்துவிட்டார்!
நிரந்திர குடியிருப்பு தகுதியைக் கொடுத்த அரசாங்கத்துக்கு அவர் செய்கின்ற கைம்மாறாக இதனை நாம் எடுத்துக் கொள்ளலாம்!
உண்மையைச் சொன்னால் இந்நாட்டுக்கு அவர் தேவைப்படாதவர்! ஆனால் இங்குள்ள இஸ்லாமிய போதகர்கள் என்று கூறிக் கொள்ளுபவர்கள் ஜாகிரை பெரிய இஸ்லாமிய அறிஞராக நினைப்பது தான் இங்குள்ள பிரச்சனை.
பேராசியர் ராமசாமி அவர்கள் ஜாகிரை அவரது நாட்டுக்கு அனுப்பப்பட வேண்டும் என்று சொன்னதில் எந்தத் தவறும் இல்லை. இந்த நாட்டில் வாழ்ந்து கொண்டு இங்குள்ள ஒரு சமயத்தினரைக் கேவலப்படுத்துவதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. பேராசிரியர் மட்டும் அல்ல. இங்குள்ள மக்கள் பலர் அவர்களது எதிர்ப்பினைத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் ஏனோ ஒரு தீவிரவாத கும்பல் பல புகார்களைக் காவல்துறையில் செய்து கொண்டு இதனை ஒரு பிழைப்பாகவே செய்வது நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை!
உண்மையை உரத்துக் கூறுவது ஒன்றும் தப்பில்லை! நீதி நிலைக்கும், நம்புவோம்!
No comments:
Post a Comment