Tuesday 3 July 2018

இரண்டு இலட்சம் பேருக்கு குடியுரிமை...!


மிகவும் நல்லதொரு செய்தியை உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ மொகைதின் யாசின் அறிவித்துள்ளார். நீண்ட நாள் எதிர்பார்க்கப்பட்ட ஒரு செய்தி. பாரிசான் அரசாங்கமும், ம.இ.கா.வும் அக்கறை காட்டவில்லை1 இன்றைய பக்காத்தான் அரசாங்கம் ஏற்கனவே அவர்களது தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி அதனைச் செயல் வடிவில் கொண்டு வந்து விட்டார்கள்.

வரவேற்கிறோம்! இதனை ஒரு சாதாரண செய்தியாக நாம் எடுத்துக்கொள்ள முடியாது. எத்தனை ஆண்டுகள்,  எத்தனை ஆண்டுகள் நம் மக்கள் இதற்காகக் காத்திருந்தனர். ஒன்றா, இரண்டா. .. முப்பது, நாற்பது ஆண்டுகள் இழுக்கடிக்கப்பட்டு ஒரு சிலருக்கு அறுபது  வயதில்,  ஒரு சிலருக்கு எழுபது  வயதில் .....என்ன என்ன கொடுமைகள்..... வேலை கிடைக்காமல்.......குறைவான ஊதியத்தில்..... முதலாளி என்ன சொன்னலும் ஆமாஞ்சாமி போட்டுக்கொண்டு ... சே! என்ன வாழ்க்கை!  ஆனால் இவர்களுடைய ஆத்திரம், கோபம், வேதனை - எதனையுமே ஆட்சியிலிருந்தவர்கள் கண்டு கொள்ளவில்லையே! நம்மைப் பொருத்தவரை நாம் இன்னும் குற்றவாளி ம.இ.கா. தான் என்று அடித்துச் சொல்லுகின்ற நிலைமையில் தான் இருக்கிறோம்! காரணம் பதவியில் இருந்தவன் தனக்குப் பெண்டாட்டிகளையும், பங்களாக்களையும் தான் கூட்டிக் கொண்டு போனானே தவிர களத்தில் இறங்கி வேலை செய்யத் தயாராய் இல்லை!

நிரந்திர அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த சிவப்பு அடையாள அட்டைகள் வைத்திருக்கும் மலேசியர்களுக்கு இப்போது நீல  நிற அடையாள அட்டைகள் கிடைக்கும் என நம்பிக்கையான செய்தி மனதை குளிர வைக்கிறது.

இன்னும் குடியுரிமை கிடைக்காத மலேசியர் பலருக்கு குடியுரிமை கிடைக்கும் என்னும் நம்பிக்கையும் ஏற்பட்டிருக்கிறது. 

நூறு  நாள்களில் இந்தப் பிரச்சனைகளைக் களைவோம் என்னும் தேர்தல் வாக்குறுதி நிச்சயமாக நடக்கும் என நம்புகிறோம். இந்தப் பிரச்சனைக்கு முற்றிலுமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோள். உள் நாட்டில் பிறந்தவனை நாடற்றவன் என்று கேலி செய்வதை இனி மேலும் நாம் சகித்துக் கொண்டிருக்க முடியாது.

டான்ஸ்ரீ மொகைதீனின் இந்த அறிவிப்பை மனமார வரவேற்கிறோம்! வாழ்த்துகள்!

No comments:

Post a Comment