Tuesday 31 July 2018

எழுத்தாளர் பீர்முகமதுக்கு நன்றி!

"தமிழ் மலரில்" எழுத்தாளர் சை பீர்முகமது  அவர்கள் "என்ன தவறு செய்தார் ராமசாமி?" என்று வெளியிட்ட அறிக்கையைப் படிக்க நேர்ந்தது.

நான் எல்லாக் காலங்களிலும் பிறரிடம் சொல்லுவதுண்டு. பினாங்கு மாநிலத்தைப் பொறுத்தவரை தமிழர்களுக்கு எதிரிகள் என்றால் அங்குள்ள தமிழறியா தமிழ் முஸ்லிம்கள் தான் என்று.

அவர்கள் தங்களை பூமிபுத்ராக்களாகக் காட்டிக் கொள்ளட்டும். இந்தப் பூர்வீக மண்ணுக்கே சொந்தம் என்று சொந்தம் கொண்டாட்டும்.  அங்குள்ள எல்லா வளங்களையும் கொள்ளையடிக்கட்டும் (அதைத்தான் அவர்கள் பாரிசான் ஆட்சியில் செய்து கொண்டிருந்தார்கள்!) ஆனால் நமக்கு அதைப் பற்றியெல்லாம் கவலையில்லை! 

தமிழர்களைச் சீண்ட வேண்டாம் என்று தான் நாம் சொல்லுகிறோம். நீங்கள் ஏதோ உயர்ந்தவர்கள் போலவும், நாங்கள் எல்லாம்  தாழ்ந்தவர்களைப்  போலவும் காட்டிக் கொள்ளுவதை  நிறுத்துங்கள் என்று தான் சொல்லுகிறோம்.

லிம் குவான் எங் முதலமைச்சராக இருந்த போது எத்தனை எத்தனை ஆர்ப்பாட்டங்கள்! ஒன்றா, இரண்டா! ஆனால் என்ன நடந்தது? உங்களால் அவர்களை அசைக்க முடியவில்லையே!

இப்போது புதிதாக ஓரு பிரச்சனையைக் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஸாகிர் நாயக் இஸ்லாமிய போதகராக இருந்துவிட்டுப் போகட்டும். மற்ற மதங்களின் போதகராக இருக்க வேண்டாம்! அதைத்தான் நாங்கள் சொல்லுகிறோம்.  பேராசிரியர் ராமசாமியும் அதைத்தான் சொல்லுகிறார். அதற்குப் புதிதாய் ஒரு சாயம் பூசுகிறார்கள் அவரைத் தீவிரவாதி என்று!

சை பீர்முகமது சரியாகச் சொன்னார்:  " தேர்தலில் தோல்வியடைந்த அம்னோவில் இருக்கும் தமிழே அறியாத முஸ்லிம்களே மொத்தப் பிரச்சனைக்கும் காரணமாக இருக்கிறார்கள். தொப்புள் கொடி உறவுகள் பற்றி அறியாதவர்கள் அவர்கள். தமிழ் அறிந்த முஸ்லிம்கள் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு நான் அறிந்தவரை ஆதரவாக இல்லை".

ஒரு தமிழர் துணை முதல்வராக இருப்பதை இவர்கள் விரும்பவில்லை. நம்மிடையே காட்டிக் கொடுக்கும் எட்டப்பர்கள் நிறையவே இருக்கிறார்கள்! அதில்  இந்தப் புதிய பூமிபுத்ராக்களும் அடங்குவர். இது ஒரு இரண்டும் கெட்டான் கூட்டம்.  இதுவும் இல்லை, அதுவும் இல்லை! நேரம் வரும். அப்போது இவர்கள் எதை உணர வேண்டுமோ, அதனை உணர்வார்கள்!

சை பீர்முகமதுக்கு நன்றி! நல்லதே நடக்கும் என நம்புவோம்!

No comments:

Post a Comment