Tuesday 17 July 2018

விவாதம் வேண்டாமே,....!

பினாங்கு துணை முதல்வர் பி.ராமசாமியும்,  இஸ்லாமிய சமயப் போதகர் ஜாகிர் நாய்க்கும் விவாதம் செய்ய வேண்டும் என்கிற பேச்சுக்கே இடமில்லை. அது ஒரு முட்டாள்தனமான அரைகுறைகளின் அரை வேக்காடுகளின் அவசியமற்ற பேச்சு.

ஜாகிர் நாய்க் ஓர் சமயப் போதகர். அவர் இங்கிருப்பதை ராமசாமி மட்டும் தான் எதிர்க்கிறார் ஏன்று சொல்ல முடியாது. இந்த நாட்டிலுள்ள அனைத்து இந்து சகோதரர்களும் எதிர்க்கவே செய்கிறார்கள்.  ஏன்? மற்ற சமயத்தினர் யாரும்  அவரைக் கொஞ்சவில்லை,  இஸ்லாம் மதத்தினரைத் தவிர!

காரணம் அவர் சார்ந்த மதத்தைப் பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் பேசட்டும். ஒவ்வொருவரும் தங்களது மதத்தைப் பற்றி உயர்வாகத் தான் பேசுவார்கள்.  ஜாகிரும் அதற்கு விதி விலக்கல்ல. ஆனால் அவருக்கு மற்ற சமயங்களைப் பற்றி ஒன்றும் தெரியாது என்பதை அவர்  ஒப்புக்கொள்ள வேண்டும். 

சரி நமது விஷயத்துக்கு வருவோம்.  இப்போது ஜாகிர் நாய்க் பிரச்சனை என்பது மலேசியாவுக்கும் இந்தியாவுக்கும் உள்ள பிரச்சனை. இரு அரசாங்கங்களும்  எப்படி அதனைத் தீர்க்கப் போகின்றன என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். நாம் தேவை இல்லாமல் இதனைப் பற்றி விவாதம் செய்ய வேண்டும் என்னும் அவசியமில்லை. ஜாகிர் நாயக் எங்கிருந்தோ வந்த ஒரு மனிதர். அவர் பிறந்த நாடு அவரைத் தேசத் துரோகி என்கிறது. நமது  நாடு அவருக்குக்  குடியுரிமைக் கொடுத்துவிட்டு அவரைத் தேசத் தியாகி என்கிறது! அவ்வளவு தான்!

நம்மைப் பொறுத்தவரை,  ஜாகிர் நாயக் பிரதமர் மகாதீரின்  அறிவுரையைக் கேட்டு நடப்பார் என நம்புவோம்.  பிரதமர் அவருக்கு "ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள்" என்கிற அறிவுரையே அவருக்குப் போதும்  அதனை மீறீனால் அதற்கானப் பலனை அவர் தான் அனுபவிக்க வேண்டும்! ஜாகிருக்கே தெரியும். அவர் இந்தியாவுக்குப் போனால் அவருடைய கதி அதோ கதி என்று அவர் நன்கு புரிந்து வைத்திருக்கிறார்! 

அதனால் அவர் எவ்வளவு காலம் இங்கு இருப்பார் என்பது நமக்குத் தெரியாது. இருக்கிற காலத்தில் அவர் இஸ்லாமைப் போதிக்கட்டும். பிற மதங்களில் அவர் தலையிட்டால்  அவரைக் காப்பாற்ற ......யாரும் இருக்க மாட்டார்கள்!

No comments:

Post a Comment