Monday 19 November 2018

ஜ.செ.க. இனவாதக் கட்சியா..?

பொதுவாக ஜனநாயக செயல் கட்சி என்றாலே அது ஒரு இனவாத கட்சி என்பதாகவே இது நாள்வரை தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது என்பது உண்மை. அதுவும் மொழி என்று வந்து விட்டால் அந்தக் கட்சி தன்னை மாற்றிக் கொள்ளாது என்பதும் உண்மை.

சிலாங்கூர் மாநில சுல்தான் அவர்கள் சமீபத்தில்  சிலாங்கூர் அரசாங்கத்திற்கு உத்திரவு ஒன்றினை  பிறப்பித்துள்ளார்.


அதாவது சாலை வழிகாட்டி  பலகைகள் இனி தேசிய மொழியில் மட்டுமே எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.  அது சுல்தானின் உத்தரவு. நாம் அது பற்றி ஒன்றும் கருத்துரைக்க முடியாது.

ஆனால் இந்த இரண்டு மொழி வழிகாட்டிகளை நான் எதிர்பார்க்கவில்லை. சீனம், தேசிய மொழி என்பது கூட என்னைப் போன்றவர்கள் அறியாமல் இருக்கிறோம்!  ஜ.செ.க. நேர்மையான ஒரு கட்சி என்றால்  இந்தப் ப்லகைகள் மூன்று மொழிகளில் எழுதப்பட்டிருக்க வேண்டும். அவர்கள் தமிழையும் சேர்த்துக் கொண்டிருக்க வேண்டும்.  இவர்களின் ஆளுகைகைக்கு உட்பட்ட  மற்ற இடங்களில் இப்படித்தான் செயல்படுகிறார்களா என்பதும் தெரியவில்லை.

அம்னோவை பார்த்துப்  பயப்படுகின்ற போக்கு ம.இ.கா. வினரிடைய நிலவி வந்தது.  அதுவே ஜ.செ.க. தலைவர்களைப் பார்த்துப் பயப்படுகின்ற போக்கு இந்தியத் தலைவர்களுக்கும் இருப்பதாகவே தோன்றுகிறது! எல்லாம் பதவி செய்கின்ற பம்மாத்து வேலைகள்! நமது இந்திய தலைவர்களிடமிருந்து இது போன்ற இந்திய மக்களை ஏமாற்றும் வேலைகளை நாம் எதிர்பார்க்கவில்லை!

நமது  ஜ.செ.க. இந்திய தலைவர்களுக்கு ஒரு வேண்டுகோள். ம.இ.கா.காரன் படிக்காதவன் என்பதால் அம்னோ வைப் பார்த்து கூனிக்குறுகினான்!  ஆனால் நீங்கள் அப்படி அல்ல. அனைவருமே படித்த பட்டதாரிகள்.  பெரும்பான்மையோர் வழக்கறிஞர்கள். இன்னும் நல்ல கல்வித்தரம் உடையவர்கள். நீங்களும் இந்தப் பதவிக்காக  இந்நாட்டு இந்தியர்களை கூனிக் குறுக வைக்காதவர்கள்!

ஜ.செ.க. சீனர்களின் கட்சி என்பதற்காக நீங்களும் கூனிக்குறுக வேண்டாம்!  நீங்கள் கூனிக்குறுகினால் நாங்கள் எப்படி தலை நிமிர முடியும்?

No comments:

Post a Comment