நாளிதழ் செய்தி ஒன்றைப் படிக்க நேர்ந்தது. தமிழ்ப்பள்ளிகளில் பள்ளியின் வாரியத் தலைவர்களாக தகுதிப் பெற்றவர்கள் யார்?
ஜொகூர், சிகாம்புட் தமிழ்ப்பள்ளியில் நடந்த நிகழ்வு ஒன்றில் அந்தப் பள்ளியின் வாரியத் தலைவரைப் பற்றியான செய்தி:
1) வாரியத் தலைவர் 15 ஆண்டுகளாக அந்தப் பதவியில் இருக்கிறார்.
2) 'இரு'க்கிறார்! மற்றபடி எதுவுமில்லை!
3) பள்ளி வாரியம் கொண்டு வரும் நல்ல திட்டங்களுக்கும் தடையாக இருக்கிறார்.
4) பள்ளியின் மேம்பாட்டுக்காக எதனையும் செய்வதில்லை!
5) ஒரு நவீன மண்டபம் கட்டுவதற்கான பரிந்துரையை ஏற்றுக்கொள்ளவில்லை! தடையாக இருக்கிறார்!
இந்தச் செய்தியைப் படித்த போது மனம் வலிக்கிறது. இப்போது தான் முதன் முதலாக இது போன்ற ஒரு செய்தியைப் படிக்கிறேன்.
இது போன்ற வாரியத் தலைவர்கள் பலர் இருக்கலாம். வெளியே தெரியவில்லையே தவிர நமக்குத் தெரியாமல் பலர் இருக்கலாம்.
அப்படி என்றால் இந்த வாரியத் தலைவர் பதவிக்கு யார் தகுதி படைத்தவர்கள்? மேற் குறிப்பிட்ட பள்ளி மேம்பாடு அடைய வேண்டுமானால் அந்தத் தலைவர் பதவி விலக வேண்டும். அது நடக்கும் காரியமா, தெரியவில்லை! காரணம் அவர் முன்னாள் ஏதேனும் அரசியல்வாதியுடன் தொடர்பு உள்ளவராக இருக்கலாம்! இப்போது அவர் பலம் இழந்தவராக இருந்தால் அது சாத்தியம்.
தகுதி பெற்றவர்கள் யார் என்றால் முதலில் அவர் தமிழ்ப்பள்ளியில் படித்தவராக இருக்க வேண்டும். தமிழ் இன உணர்வு உள்ளவராக இருக்க வேண்டும். மொழிப்பற்று உள்ளவராக இருக்க வேண்டும்.
இப்போதைய நிலை என்ன? இயக்கங்கள், மன்றங்கள் - இவைகளில் உள்ள தொண்டர்களைப் பாருங்கள். அனைவரும் தமிழர்கள். ஆனால் அந்த இயக்கங்களின் தலைவர்களைப் பாருங்கள். ஒருவனும் தமிழனாக இருக்க மாட்டான்! ஆனால் அவன் தன்னைத் தமிழன் என்று சொல்லிக் கொள்ளுவான்! இங்கிருந்து தான் பிரச்சனைகள் ஆரம்பமாகின்றன. தமிழைப்பற்றி அவனுக்குக் கவலை இல்லை! தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாடு பற்றி அவனுக்குக் கவலையில்லை. இன்றைய நிலையில் தமிழ் மொழிக்கு எதிராக இருப்பவர்கள் இந்தத் தலைவர்கள் தான்! தலைமை ஆசிரியர்கள் தான்!
இவர்களை எப்படி களையெடுப்பது என்பது பற்றி யோசிக்க வேண்டும்.
வாரியத் தலைவர்கள் இனி தமிழராகவே இருக்க வேண்டும்! அதனை உறுதி செய்வோம்!
No comments:
Post a Comment