Friday 23 November 2018

வேதமூர்த்தி பதவி விலகலா...!

பொதுவாக அரசியலில் முட்டாள்கள் அதிகம்! அதைவிட மூடர்கள், அறிவற்றவர்கள்  இன்னும் அதிகம்!

இது இன்று நேற்றல்ல, எல்லாக் காலங்களிலும் இதே நிலை தான்! ஏதோ ஒரு பிரச்சனை! உடனே "பதவி விலகு!" என்னும் ஓங்கி ஒலிக்கும் சத்தம்!

அரசியல்வாதிகளுக்கு இது ஒன்றும் புதிதல்ல! அது எங்கேயாவது ஒலித்துக் கொண்டு தான் இருக்கும்! இந்த நிமிடமும் நமது நாட்டில் அது ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது!

காரணம் அரசாங்கத்தில் உள்ளோர் இந்த இசர்ட் (ICERD)  மூலம் பூமிபுத்ராக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லையென்று   சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் ஒரு சில அரசியல்வாதிகளிடம் இல்லை!

உண்மையைச் சொன்னால் "எங்களுக்குக் கிடைக்கும் எல்லாச் சலுகைகளும் போய்விடுமே" என்று அவர்கள் அழவில்லை! அது நடக்காது என்பது அவர்களுக்குத் தெரியும். இந்தப் பக்காத்தான் அரசாங்கம் எதனைக் கொண்டு வந்தாலும் அதனை   எதிர்த்தே தீர வேண்டும் என்கிற ஒரு கட்டாயத்தில் அவர்கள் இருக்கின்றனர்! அதைத் தான் அவர்கள் செய்கின்றனர்!

பிரதமர் துறை துணை அமைச்சர் பொ.வேதமூர்த்தி "இசர்ட்" க்கான விளக்கங்களைக் கொடுத்து அது நாட்டுக்கு நன்மையைக்  கொண்டு வரும் என்று சொன்னதற்காக அவர் பதவி விலக வேண்டும் என்று புலம்ப ஆரம்பித்துவிட்டது ஒரு கூட்டம்!

வேதாவை பதவி விலகச் சொல்லுவதற்கு இது ஒன்றும் மட்டும் தான் காரணமா? இல்லை! வேறு பல காரணங்களும் உண்டு. சமீப காலங்களில் இந்தியர்களுக்காக தொடர்ந்தாற் போல குரல் கொடுத்து வந்தவர் வேதமூர்த்தி. தானைத் தலைவன் என்றால் அது வேதமூர்த்தி தான். ஹின்ராப் போராட்டத்தின் போது பலர் வந்தார்கள். பின்னர் பின் வாங்கி விட்டார்கள்! ஆனால் வேதா மட்டுமே தொடர்ந்து வந்தவர். பாரிசான் ஆட்சியின் போதும் பிரதமரிடம் பேசியவர்.  பக்காத்தான் ஆட்சி அமைப்பதற்கும் உறுதுணையாக இருந்தவர். அவரே தொடர்ந்தாற் போல இந்தியர்களின் பிரச்சனையைக் கையில் எடுத்தவர். கடந்த பொதுத் தேர்தலில் 85 விழுக்காடு இந்தியர்களின் வாக்குகளைப் பக்கத்தானின் பக்கம் திருப்பியவர்.

இது ஒன்றே போதும் எதிர்தரப்பினர் அவரை எதிர்ப்பதற்கு. காலங்காலமாக இந்திய்ர்களின் வாக்குகளை அனுபவித்து வந்தவர்கள்  தீடீரென இந்த மாற்றத்திற்குக் காரணமான  வேதாவை வெறுப்பதின் காரணம் இப்போது புரியும். 

இன்றைய நிலையின்  வேதாவின் உதவி இந்திய மக்களுக்குத் தேவை. அவர் அப்படி எல்லாம் பதவி விலகி விட  முடியாது.  அவர் இந்தியர்களின் நலனைக் காப்பதற்காகவே பதவியில் அமர்த்தப்பட்டவர்,

அவர் பதவியில் தொடர்வார்! தொடர்வார்! தொடர்வார்!

No comments:

Post a Comment