Thursday 29 November 2018

வழக்கறிஞர்களின் அராஜகம்...!

சீபீல்ட் ஆலய விவகாரத்தில் ஏற்கமுடியாத ஒரு செய்தி. மேம்பாட்டாளர்களின் வ்ழக்கறிஞர்களே இந்தப் பிரச்சனைகளுக்குக் காரணம் என்பதாக உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் கூறியிருப்பதானது சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.

படித்தவர்கள், பண்புள்ளவர்கள் என்று பொது மக்களால்   புகழப்படும் இந்த வழக்கறிஞர்கள் இப்படி ஒரு காரியத்தைச் செய்ய எப்படி இவர்களால் முடிந்தது என்கிற கேள்விகள் இப்போது நாடெங்கிளும்  ஒலித்துக் கொண்டிருக்கிறது!

குண்டர் கும்பல்களை ஏவி  காரியங்களைச்  சாதிக்க நினைப்பது படித்தவர்கள் செய்யக்கூடிய வேலை அல்ல! அரைகுறை அரசியல்வாதிகளுக்குத் தான் குண்டர் கும்பல்கள் தேவை  தங்களது பதவியைத் தக்க வைத்துக் கொள்ளுவதற்கு!  இப்போது வழக்கறிஞர்களும்  இதே  பாணியைத் தான்  பின் பற்றுகிறார்கள் என அறியும் போது  மகாகவி பாரதி சொன்னாரே: "படித்தவன் பாவம் செய்தால் போவான் போவான் ஐயோ என்று போவான்"  என்பது தான்  ஞாபகத்திற்கு வருகிறது.  அவன் மட்டுமா போவான்? கூடவே அவன் குடும்பமும் சேர்ந்து போகும்!

கோவி.ல் என்றாலே புனிதம்.  மாற்று மதத்தினரை சில சமயத் தலங்களில் அனுமதிப்பதில்லை.  

சீபீல்டுஆலயத்திலோ நடந்தது வேறு. குண்டர் கும்பலை வைத்து  ஆலயத்தை தகர்க்கும்  முயற்சியில்  ஈடுபட்டிருக்கின்றனர். அதுவும் அந்த குண்டர் கும்பல் மலாய்  இளைஞர்கள் என்று தெரியவரும் போது அது பிரச்சனையைத் திசை திருப்பிவிட்டது. காரணம்  மலாய்  இளைஞர்கள் இந்து  கோவில்களுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. இவர்கள்  வலுகட்டாயமாக உள்ளே  புகுந்து  கோவிலில் உள்ள சிலைகளை உடைத்திருக்கின்றனர். அதன் பின்னர்  என்ன  நடந்தது  என்பது  நாம் அனைவரும் அறிந்ததே.  இரகசியம் ஒன்றுமில்லை.

ஆனாலும்  இங்கு  நாம்  கவனிக்க வேண்டியது மலாய்  இளைஞர்களை வழக்கறிஞர்கள் அடாவடித்தனமான வேலைக்கு அமர்த்தியிருப்பது. இப்போது இந்தப் பிரச்சனை  கட்டுப்பாட்டில்  இருந்தாலும் இவர்களுடைய உந்துதலால் தான் மலாய் இளைஞர்கள் இந்தத் தவறை செய்திருக்கின்றனர். பொதுவாகவே வழக்கறிஞர்களாக இருந்தாலும் சரி அல்லது அரசியல்வாதிகளாக இருந்தாலும்  சரி  கூலிக்கு  ஆள் அமர்த்தி தங்களது காரியங்களைச்  சாதிக்க  நினைப்பது  மிகவும்  கேவலமான  செயல். 

அந்த இளைஞர்களுக்குப் பணத்தைக் கொடுத்து அவர்களின் போக்குவரத்துக்குப் பணம் கொடுத்து  ஒரு  கோவிலைப்  போய்  உடையுங்கள் என்று  உத்தரவிடுவது  படித்தவர்களின் அநாகரிகச் செயல். இதற்கு இவர்கள் பிச்சையே  எடுக்கலாம்.  அப்பன் பெயரைக் கெடுத்து, அம்மா பெயரைக்  கெடுத்து  இப்படி  ஒரு  வாழ்க்கை  வாழ்வது  அவசியம் தானா என்று  கேள்வி  எழுப்பினால் ஒன்றும் தவறில்லை!

வெகு விரைவில்  நீதிமன்றத்தில் இவர்களின்  முகத்திரை  கிழியும்  என எதிர்பார்க்கலாம்.

நடக்கட்டும்!  நீதியே வெல்லும்!

No comments:

Post a Comment