Friday, 6 May 2016
கேள்வி - பதில் (10)
கேள்வி
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத் தொலைக் காட்சிகள் ஒளிபரப்புகின்ற அத்தனை செய்திகளும் தி.மு.க., அ.தி.மு.க. செய்திகளையே முன்னிறுத்துகின்றன. வெற்றி வாய்ப்பு இந்த இரு கட்சிகளுக்கு மட்டும் தானோ?
பதில்
திரவிடக் கட்சிகள் ஐம்பது ஆண்டுகாள ஆட்சியைக் கொண்டுள்ளன.. ஐமபது ஆண்டுகள் இடைவிடாது தொடர்ச்சியாக ஆட்சி செய்த கட்சிகள் அவை. இந்த ஊடகங்களும் ஏதோ ஒரு வகையில் இந்தக் கட்சிகளுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கின்றன. வேறு வழியில்லை! அந்த இரு கட்சிகளையும் எதிர்க்க முடியாது. நாளை இவர்களே ஆட்சிக்கு வரலாம்! இப்போது வேறு கட்சிகளுக்கு ஆதரவு கொடுத்தால் நாளை இவர்கள் பதவிக்கு வரும் போது பழி வாங்கும் படலம் ஆரம்பமாகும்! ஏன் பிரச்சனை என்னும் நோக்கில் தான் அவர்கள் செயல் படுகிறார்கள்.
ஆனாலும் இந்த இரு கட்சிகளுமே இம்முறை ஆட்சி அமைக்கப் போவதில்லை என்பது தான் யதார்த்தம். இது நாள் வரை இல்லாத எதிர்ப்பு இப்போது அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இனி இலவசம் என்றெல்லாம் சொல்லி மக்களை ஏமாற்ற முடியாது.
நீண்ட கால நோக்கு எதுவும் இந்த இரு கட்சிகளிடமும் இல்லை. மேலும் இப்போதைய இளைய தலைமுறை இவர்களை நம்பவுமில்லை! அரசியல் கொள்ளையர்கள் என்பதாகவே இப்போது இவர்கள் பார்க்கப்படுகிறார்கள்!
இந்தத் தேர்தலுக்குப் பின்னர் இந்த ஊடகங்கள் அனைத்தும் இந்த இரு கட்சிகளையும் மதிக்கப் போவதில்லை!
அது வரை நாம் பொறுத்துத் தான் ஆக வேண்டும்!
Labels:
கல்கண்டு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment