Monday 30 May 2016

ஒரு குடும்பத்திற்கு ஒரு வர்த்தகர்!


ஒரு குடும்பத்திற்கு ஒரு வர்த்தகர் என்னும் உயரிய நோக்கத்தை முன்னெடுத்திருக்கிறது எண்ட்ரிகோஸ் நிறுவனம்.

அதன் நிறுவனர் எஸ்.கே.சுந்தரம் அவர்களுக்கு முதலில் நமது வாழ்த்துக்கள். காரணம் தொழிற்துறையில் வேற்றி பெற்றவர்கள் தமது  அனுபவங்களையும் அதன் ஏற்றத்தாழ்வுகளையும்  தமது இனத்தாரோடு பகிர்ந்து கொள்ளுவது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. மீண்டும் அவருக்கு நமது பாராட்டுக்கள்!

எண்ரிகோஸ் நிறுவனம் தொடங்கபட்டு 25 ஆண்டுகள் ஆகின்றன. உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும்  அவர்களது பால்மாவு, நெய், ஐடாப் டீ, சோயா மேட், சுராபி மசாலா பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்திய இளைஞர்கள் பொருளாதாரத்தில் உயர வேண்டும், ஊக்கப்படுத்த வேண்டும்  என்னும் உயரிய நோக்கத்தோடு நாடு முழுவதும் வர்த்தக பயணத்தை மேற்கொள்ளுகிறது எண்ரிகோஸ் நிறுவனம்.

ஒவ்வொரு ஊரிலும் நடைபெரும் வியாபாரக் கருத்தரங்கில் இளைஞர்கள் வியாபாரத்தில் ஈடுபட ஊக்குவிக்கப்படுவர்.  இந்த வியாபாரக் கருத்தரங்கில் கலந்து கொள்ளும் இளைஞர்களில் 50 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சனி. ஞாயிற்றுக் கிழமைகளில் பயிற்சி அளிக்கப்படும் என்கிறார் திரு. சுந்தரம்.

திரு.சுந்தரம் அவர்கள் நல்லதொரு முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். வருகிற ஜூன் மாதம் முதல்,  4 (நான்கு) மாதங்களுக்கு நாடு முழுவதும் 25 நகரங்களில் அவரது வர்த்தகப் பயணம் நடைபெறவுள்ளது. முதல் நிகழ்வு ஜூன் மாதம் 4-ம் தேதி டான்ஸ்ரீ சோமா அரங்கில் காலை 8.30 முதல் மாலை 5.30 வரை நடைபெறும்.

18 வயதிற்கு மேற்பட்ட,  வியாபாரத்தில் ஆர்வமுள்ள  இளைஞர்கள், வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், வியாபாரத்தை மேம்படுத்த விரும்பவர்கள் அனைவரும் இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ளலாம்.

நுழைவு இலவசம். ஆனால் முன்பதிவு அவசியம். முன்பதிவு செய்வோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

எண்ரிகோஸின் இந்த வர்த்தகப் பயணத்திற்கு மலேசிய நண்பன் நாள் இதழும் மின்னல் எப் எம்மும் பிரதான ஆதரவாளர்கள். அதே சமயத்தில் நமது ஆதரவும் சேர்ந்தால் ஒரு எழுச்சிமிக்க வர்த்தக சமூகத்தை நம்மால் உருவாக்க முடியும்.
மேல் விவரங்களுக்கு இவர்களைத் தொடர்பு கொள்க: மதன்     017-4488556
கார்த்திக் 014-3495900.

நன்றி: நண்பன்

No comments:

Post a Comment