Thursday 19 May 2016

கேள்வி - பதில் (14)


கேள்வி

தமிழகத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. வழக்கம் போல் தானே!


பதில்

ஆமாம்! வழக்கம் போல் தான்! நாம் என்ன தான் ஜனநாயகம், பணநாயகம் என்று எதைச் சொல்லியாவது குறை கண்டுபிடித்தாலும் அது மக்களின் தீர்ப்பு என்று ஏற்றுக்கொள்ள வேண்டும்.

வெளி நாட்டுத் தமிழர்களுக்கு இது ஒரு ஏமாற்றமானத் தேர்தல் என்பதில் ஐயமில்லை. நாம் எதிர்பார்த்தது நடக்கவில்லை. தமிழ் நாட்டு வாக்காளர்களுக்கு அவர்களது வாழ்க்கைப் பிரச்சனையே பெரிய போராட்டம். அவர்கள் வெளி நாடுகளில் வாழும் தமிழர்களைப் பற்றி கவலைப்பட நேரமில்லை. அவர்களுக்கு உள் நாட்டு அரசியல் புரியவில்லை. அவர்கள் புரிந்து கொண்டு ஆகப்போவதும் ஒன்றுமில்லை.

தி.மு.க. தலைவர் கருணாநிதி மேல் சுமத்தப்பட்டக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஜெயலலிதாவுக்குச் சாதகமாக போய்விட்டதாகவே தோன்றுகிறது. ஆமாம்! ஜெயலலிதா மேல் குற்றம் சொன்னாலும் அதற்குக் காரணம் கருணாநிதி தான் என்னும் அனுதாப அலையாகக் கூட இருக்கலாம்.

ஆனால் வருகின்ற ஐந்து ஆண்டுகள் ஜெயலலிதாவுக்கு மிகவும் சோதனையான ஆண்டுகள்.  மீண்டும் தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகளுக்கு அவர் பதவி ஏற்கிறார், இனி கருணாநிதி தான் எல்லாவுற்றுக்கும் காரணம் என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது.

வருகின்ற ஐந்து ஆண்டுகள் சிறப்பான ஆட்சியைத் தமிழகத்துக்குக் கொடுப்பார் என நம்புவோம்.வயதானக் காலத்தில் மக்களின் சாபத்திற்கு ஆளாக வேண்டாம் என்று அவரும் நினைக்கலாம் அல்லவா! அதற்காகவே நல்ல ஆட்சியை அவர் தரலாம்; தருவார் என நம்புவோம்.

அம்மையார் ஜெயலலிதாவுக்கு நமது வாழ்த்துகள்!

No comments:

Post a Comment