Wednesday 11 May 2016

கேள்வி - பதில் (12)


கேள்வி

தொலைக் காட்சி கருத்துக் கணிப்பில் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி அவர்களுக்கு இளைஞர்களின் ஆதரவு பெரும் அளவில் இருப்பதாக சொல்லுப்படுகிறதே! இது நம்பக்கூடிய கணிப்பா?

பதில்

நம்பக்கூடியதாக இல்லை! அப்பாவும் மகனும் (கருணாநிதியும் ஸ்டாலினும்) சேர்ந்து தயாரித்த சொந்தக் கருத்துக் கணிப்பாக இது இருக்க வேண்டும்!

ஐம்பது கால திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் அனைத்தும் - பெரும்பாலும் தொலைக்காட்சி ஊடகங்கள் இவர்களது கைவசம்! பத்திரிக்கைகளும் அப்படியே! அதனால் அவர்களது வசதிகளுக்கேற்ப கருத்துக் கணிப்புக்களை அவர்களே தயாரித்துக் கொள்கிறார்கள்!

இளைஞர்கள் தீடீரென அவர் மீது பற்றும் பாசமும் ஏற்பட அப்படி என்ன அவர்களுக்குச்  செய்துவிட்டார்? சாராயக்கடைகளைத் திறந்து இளைஞர்களைக் குடிகாரர்களாக்கியது ஒரு பெரிய சாதனையோ!  அந்தக் குடிகார இளைஞர்களும் இப்போது அவருக்கு எதிராகத் தான் செயல் படுகிறார்கள்! அவர்களும் ஒரு நாள் திருந்தி தானே ஆக வேண்டும்!

அதுவும் அல்லாமல் அவர் என்ன இப்போது தான் பராசக்தி படத்திற்குக் கதை வசனம் எழுதி, கணேசன் நடித்து, கிருஷ்ணன்பஞ்சு இயக்கி, நேஷனல் பெருமாள் தயாரித்த பராசக்தி படம் வெளியாயிருப்பதாக நினைக்கிறாரோ! ஞாபக மறதியோ?

அந்தக் கால இளைஞன் ஏமாந்தது போல இந்தக்கால இளைஞன் ஏமாற மாட்டான்! அப்போது சினிமா மட்டும் தான் அவனுக்கு அனைத்தும்.  இப்போது அப்படி அல்ல.  இணையத்தளத்தைத் திறந்தால் அரசியல்வாதிகளின் எல்லா அயோக்கியத்தனங்களும் எல்லா யோக்கியத்தனங்களும் தானாக வந்து விழும்!

மு.கருணாநிதி அவர்கள் இப்போது வெறும் கதை வசனகர்த்தா அல்லவே இளைஞர்களைக் கவர!  அவர் இலட்சம் கோடி ஊழலில்  தவழும் அரசியல்வாதியாயிற்றே!


No comments:

Post a Comment