Thursday 12 May 2016

கேள்வி - பதில் (13)


கேள்வி

தமிழகத்தில் ஊழல் என்றால் அது ஏதோ கருணாநிதிக்கு  மட்டுமே சம்பந்தம் போலவும்  ஜெயலலிதா தூய்மையான அரசியல்வாதி போலவும் பேசப்படுகின்றதே அது சரியா?

பதில்

அது சரியல்ல! ஊழலக்குப் பிள்ளையார் சுழி போட்டவர் கருணாநிதி. ஆரம்பம் அவருடையது. அந்தப் பிள்ளையார் சுழி மேல் மல்லையா சுழி போட்டவர் ஜெயலிலதா!

அன்று  தூய்மையான அரசியல்வாதியாகத் திகழ்ந்த மறைந்த காமராசரைத் தோற்கடித்து பதவிக்கு வந்த அண்ணா  கூட எந்த இலஞ்ச குற்றச்சாட்டுக்கும் ஆளாகவில்லை. ஆனால் அப்போதே கருணாநிதி தனது ஊழல் வேலையை ஆரம்பித்துவிட்டார்.

அன்று கருணாநிதி சரியான அரசியல் பாதையைத் தமிழகத்தில் போட்டிருந்தால் ஜெயலலிதா இந்நேரம் பாட்டி வேடங்களில் தமிழ்ப்படங்களில் நடித்துக் கொண்டிருப்பார்! எம்.ஜி.ஆர்.கூட நீண்ட நாள் இன்னும் வாழ்ந்திருப்பார்.

கருணாநிதி அன்று ஆரம்பித்து வைத்த அனைத்தும் தமிழகத்தின் அழிவுக்குத் தான் வித்திட்டது! உண்மையைச் சொன்னால் அவர் ஓரு நேர்மையற்ற அரசியல்வாதி. ஒரு நேர்மையற்ற இலக்கியவாதி! எந்த ஒர் உண்மை இலக்கியவாதியும்  ஒரு மொழியை அழிக்க விரும்பமாட்டான்..  எந்த ஓர் இலக்கியவாதியும் எந்த ஓர் இன மக்களையும் குடிகாரர சமுதாயமாக மாற்றி அமைக்க மாட்டான்! ஆனால் கருணாநிதி அதனைச் செய்தார்!

வாழவந்த நாட்டில் அவருக்குச் சிவப்புக் கம்பள வரவேற்புக் கொடுத்தோம். வாழ வைத்தோம். வரவேற்றவனை எட்டி உதைத்தவர் கருணாநிதி!

கருணாநிதி கொடூர மனம் படைத்தவர்! அந்தக் கொடூரத்தில் பிறந்தது தான் ஜெயலலிதா! இரண்டு கொடூரங்களின் கொட்டம் இனிமேல் தமிழகத்தில் எடுபடாது என்பது மட்டும் நிச்சயம்!

No comments:

Post a Comment