Wednesday 25 May 2016

ஒன்றரைக்கை மனிதர்!


ஊனமாக உள்ளவர்களை நான் கேலி செய்வதில்லை.  அதை நான் வெறுக்கிறேன்.

ஆனால் நான் சொல்லுகின்ற மனிதர் கொஞ்சம்  மாறுபட்ட மனிதர். அவருக்கு ஒரு கை பாதிதான் உள்ளது. ஏதோ விபத்தில் கையை இழந்திருக்கலாம். உண்மைத் தெரியவில்லை.

அவர் பார்ப்பதற்குச் சராசரி மனிதர் தான். ஏதோ தமிழ்ச் சினிமாவில் வருகிற வில்லன் மாதிரித் தோற்றம். எப்போதும் புன்னகை! இளம் வயதினர். அவரா இப்படி?

அப்படி இவரிடம் என்னதான் விசேஷம்? அவர் பிச்சை  எடுக்கிறார். அது தான் கொஞ்சம் நெருடல். ஒரு கை மனிதர், ஒன்றரைக் கை மனிதர்,  இரண்டு கைகளும் இல்லாத மனிதர் என்று நாம் பார்த்திருக்கிறோம். அவர்கள்  ஏதோ ஒரு வகையில் தங்கள் பிழப்பை நடத்த வழி தேடிக் கொள்கின்றனர்.

அரசாங்கமும் இவர்களுக்குத் தங்கள் பிழைப்பை நடத்த பல பயிற்சிகளைக் கொடுக்கின்றனர். ஆனால் இவரோ தனது பாதிக் கையை அசைத்து அசைத்து மக்களிடம் காட்டி ஒர் அனுதாபத்தைத் தேட முயற்சி செய்கிறார். உண்மையைச் சொன்னால் யாரும் அவருக்கு அனுதாபம் காட்டுவதாகத் தெரியவில்லை. ஆனாலும் பிச்சை என்று வரும்போது நமது பெருந்தன்மை யும் கொஞ்சம் சேர்ந்து கொள்ளுகிறது! அதனால் அவர் தப்பித்துக் கொள்ளுகிறார்!

இங்கே முக்கியமாக சிந்திக்க வேண்டிய செய்தி இன்னொன்றும் உண்டு. இவர் பகலில் பிச்சைக்கார வேஷமும் இரவில் குடிகார வேஷமும் போடுபவரோ என்னும் எண்ணமும் தோன்றுகிறது!

ஒருவர் குடிகாரர் என்னும் பெயர் எடுத்துவிட்டால் அப்புறம் அவரை மாற்றுவது மிகவும் கடினம்! இவரோ இளைஞர்! இளைஞர் என்றால் அவர் பிச்சை எடுக்கத் தயங்குவார். இவர் தயக்கமில்லாமல் கையை நீட்டுகிறார் என்றால் அவர் நிரந்தர குடிகாரராக இருக்க வேண்டும். எதனையும் சட்டைப் பண்ணாதவராக இருக்க வேண்டும்!

இவரைப் பார்க்கும் போது நமக்கும் வருத்தமாகத் தான் இருக்கிறது. நல்ல திடகாத்திரமான மனிதர். ஒரு கை பாதி என்பதை வைத்து - அதனையே சாக்காக வைத்து - பிச்சை எடுக்கிறாரே, என்பது வருத்தம் தான்.

அரசாங்கம் கொடுக்கின்ற பயிற்சிகளை வைத்துக் கொண்டு நல்ல கௌரவமான  வாழ்க்கை வாழலாம்.

பிச்சை எடுப்பதையே தனது தலை எழுத்தாக மாற்றிக் கொண்டாரே என்பது தான் நமது வருத்தமே!

No comments:

Post a Comment