Saturday 28 May 2016

இந்தோனேசிய பெண்களா..? ஓர் எச்சரிக்கை!


நம் நாட்டுக்கு வெளி நாடுகளிலிருந்து வேலை செய்ய வருபவர்கள் ஏராளம்! ஏராளம்! அதே போல வெளி நாடுகளிலிருந்து வேலை செய்ய வரும் பெண்களும் கணிசமான அளவில்  இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக இந்தோனேசியப் பெண்களே முதலிடம் வகிக்கின்றனர்.

இங்கு வருகின்ற இந்தோனேசியப் பெண்கள் பலர் இங்குள்ள ஆண்களை விரும்பித் திருமணம் செய்வது என்பது ஒரளவு நடந்து கொண்டு தான் இருக்கிறது. தவறு ஏதும் இல்லை! அது அவர்களது உரிமை.

சில அனுபவசாலிகள்  தருகின்ற சில தகவல்கள் நமக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. இந்த இந்தோனேசியப் பெண்கள் பலர் வறுமையானப் பின்னணியிலிருந்து வருபவர்கள். அவர்கள் தங்களது குடும்பங்களுக்காக உழைக்க வந்தவர்கள். அவர்கள் குடும்பத்தின் முன்னேற்றம் அவர்களுக்கு முக்கியம்.

இங்கு அவர்கள் திருமணம் செய்து கொண்டாலும் கூட அவர்கள் அவர்களின் குடும்பத்திற்குச் செய்ய வேண்டிய  கடமைகளை மறப்பதில்லை. மறக்கவும் முடியாது! மறுக்கவும் முடியாது!

ஆனால் கொடுக்கப்படுகின்ற செய்தி என்னவென்றால் இவர்கள் தங்களது மாந்திரீகத்தின் மூலம் அவர்களின் கணவர்களை அடிமையாக்கி இருவரும் சம்பாதிக்கும் பணத்தை எடுத்து அவர்கள் இந்தோனேசியாவிற்கு அனுப்பி விடுகிறார்களாம்! கணவரோ ஏதோ ஒப்புக்குச் சப்பாணி யாக - பணம் பறிக்கும் இயந்திரமாக - பயன்படுத்திவிட்டு கணவர்களை 'அம்போ' என்று விட்டுவிட்டுப் போய் விடுகிறார்களாம்! அவர்கள் முஸ்லிம்கள் என்பதால் இங்கே விவாரகத்துச் செய்துவிட்டு இந்தோனேசியா போய் புதிய வாழ்க்கையைத் தொடங்கிவிடுகிறார்கள்!

 இது பெரும்பாலும் இந்தோனேசிய முஸ்லிம் பெண்கள் மட்டுமே கடைப்பிடிக்கும் ஒரு நடைமுறை.  ஆனால் கிறித்துவ, இந்து சமய இந்தோனேசியப் பெண்களிடம் இது போன்ற நடைமுறை இல்லை. காரணம் விவாவகரத்து என்பது அவர்களிடம் இல்லை!

அனைத்து இந்தோனேசியப் பெண்களும் இப்படித்தான் என்று சொல்ல வரவில்லை.  ஆனால் எச்சரிக்கையாயிருப்பது நல்லது அல்லவா!

No comments:

Post a Comment