Friday, 20 May 2016
'நாம் தமிழர்' சீமான் அவர்களே!
நாம் தமிழர் கட்சி சீமான் அவர்களே!
வணக்கம்! நடந்து முடிந்த தமிழகத் தேர்தலில் - வெளி நாடுகளில் வாழும் தமிழர்கள் - எதிர்பார்த்தபடி எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை!
வழக்கம் போல் திராவிடக்கட்சிகளின் ஆட்சி! ஜெயலலிதா கடந்த ஐந்து ஆண்டுகளில் என்ன செய்தாரோ அதையே தான் தொடருவார் என்பதில் ஐயமில்லை. இலவசங்களைக் கொடுத்தே ஆட்சி செய்பவர் அவர். அவருடைய அகராதியில் அது தான் ஆட்சி! உலகிலேயே அது தான் சிறந்த ஆட்சி என்று அவர் சொன்னால் அதற்குத் தலையாட்ட அவருடைய அனைத்துச் சட்டமன்றங்களும் அவரின் காலில் விழும்!
நமது வருத்தம் எல்லாம் தமிழகத்தின் வளங்கள் எல்லாம் சுரண்டப்படுகின்றனவே என்பது தான்.தமிழர்கள் தலைநிமிர எந்த வழியும் இல்லையே என்பது தான்.
அது உங்களுக்குத் தெரிந்தது தான். நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரிய வேண்டும் என்பதில்லை!
நண்பரே! அடுத்த ஐந்து ஆண்டுகள் நீங்கள் இன்னும் வீறுகொண்டு எழுவீர்கள் என்பது எனக்குத் தெரியும். போராட்டங்கள்! போரட்டங்கள்! பொராட்டங்கள்! அதற்கு நீங்கள் ஒய்வு கொடுக்கப் போவதில்லை!
ஆனாலும் இதனூடே ஒரு சிறிய ஆலோசனை. சரியா தவறா என்பது எனக்குத் தெரியாது. வெறும் ஆலோசனை தான். ஏதாவது ஒரு கிராமத்தை தத்து எடுத்து நீங்கள் சொன்ன வேளாண்மை தத்துவத்தை செயல்படுத்த முடியுமா என்று பாருங்களேன். அடுத்த ஐந்து ஆண்டுகளில் குறைந்த பட்சம் ஒரு கிராமத்தையாவது சீர்படுத்த முடியுமா என்று பரிட்சாத்த முறையில் செய்து பார்க்கலாமே! தேர்தல் காலத்தில் நீங்கள் சொன்னவைகள் எல்லாம் வெறும் வாய்ச்சவடால் இல்லை என்பதை நிருபிக்கலாமே!
வேளாண்மை என்பது ஒர் உதாரணம் தான். வேறு ஏதேனும் திட்டங்கள் இருந்தாலும் நீங்கள் செயல் படுத்தலாம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு கிராமத்தை ஒரு தமிழகமாக மாற்றி அமைக்க முடியுமா என்று முயற்சி செய்யுங்களேன்.
இது அடியேனின் ஒரு சிறிய ஆலோசனை.
தமிழனின் புலிக்கொடி மீண்டும் கோட்டையில் கம்பீரமாக பறக்க வேண்டும்! இது நடக்கும்; நடக்க வேண்டும்!
வாழ்த்துகள்!
Labels:
நடப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment