Tuesday 10 May 2016

கேள்வி - பதில் (11)



கேள்வி

தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியை கலைஞர் என்றும் டாக்டர் கலைஞர் என்றும் அழைப்பது சரி என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

பதில்

இல்லை! அதனை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். அவர் எந்தக் கலையில் சிறந்து விளங்கினார் என்று நமக்குத் தெரியவில்லை! ஆனாலும் நடிகவேள் எம்.ஆர்.ராதா - தூக்குமேடை - நாடகத்தின் போது இவருக்கு "கலைஞர்" என்னும் பட்டத்தைக் கொடுத்தார். நாடத்துறையில் அவர் ஆற்றிய பணிக்காக அதனை அவர் கொடுத்திருக்கலாம்.. அப்போது அந்தப் பட்டத்திற்குத் தகுதி உடையவராக அவர் இருந்தார். அதனால் நாம் அனைவருமே அவரை மரியாதைக்குரிய மனிதராக நாம்  அவரை "கலைஞர்" என்று அழைத்தோம்.

ஆனால் இப்போது - எப்படிப் பார்த்தாலும்- இது நாள்வரை தமிழ் இனத்திற்கு எதிரியாகவே அவர் நடந்து கொண்டு இருக்கிறார்.

1) தமிழ் இன அழிப்பின் போது தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள - தனது பிள்ளைகளின் பதவிக்காக -  மத்திய அரசோடு போராடிக் கொண்டிருந்தார்.
2) நமது தாய் மொழியான தமிழை முற்றிலுமாக ஒழித்துக் கட்டியவர்.   ஆங்கிலத்தை வெண்சாமரம் வீசி வரவேற்றவர்.
3)தமிழன் ஒழிய வேண்டும் என்பதற்காக தமிழ் நாட்டில் சாராயத்தைத் தேசிய மயமாக்கியவர்.
4) தமிழனை தன் சொந்த நாட்டிலேயே பிச்சை எடுக்க வைத்தவர். இலவசங்களைத் தாராளமாக்கி தமிழனைக் கையேந்த வைத்தவர். தனது திருமணத்தைக்  கூட செய்து வைக்க ஆட்சியில் உள்ளவர்களை எதிர்பார்க்க வைத்தவர்.
5) தமிழன் குனிந்த தலை நிமிராமல் அவனை எல்லாக் காலங்களிலும் தலை நிமிராமல் அடிமையாக வைத்திருந்தவர்.

தமிழனித் துரோகிகளுக்கு நாம் ஏன் மரியாதக் கொடுக்க வேண்டும்?  அவரை நாம் மு.கருணாநிதி என்றாலே அதுவே அவருக்கு நாம் கொடுக்கும் மரியாதை. வெறு அடைமொழிகள் எதுவும் அவருக்குத் தேவையில்லை!

ஐம்பது ஆண்டு கால ஆட்சியில் தமிழகத்தைச் சுரண்டியவருக்கு "கலைஞர்" என்று நாம் அழைக்க வேண்டுமா? வெண்டுமானால் "கொள்ளைக்காரர்" என்னும் பட்டத்தைக் கொடுக்கலாம்.

இன்றைய தமிழ் நாட்டின் அத்தனை தீமைகளுக்கும் அவரே காரணம்! அவரை இனி யாரும்  கலைஞர் என்று அழைத்தால்,  அழைத்தவர்  தமிழர் இல்லை என்று நாம் புரிந்து கொள்ளலாம்!




No comments:

Post a Comment