Tuesday 24 May 2016

கேள்வி - பதில் (15)


கேள்வி

ஜெயலலிதா முதல் கையொப்பம் இட்ட கோப்புகள் கொஞ்சம் நம்பிக்கை தெரிவதாக இருக்கிறதே!

பதில்

ஆமாம்! வேளாண் பெருமக்களின் கடன் தள்ளுபடி எதிர்பார்க்கப் பட்டதே. .அதை நாம் வரவேற்கிறோம் என்றாலும் அவர்களைத்  தொடர்ந்து கடனாயாளியாக வைத்திருப்பது யாருடைய குற்றம்? அதற்கு ஆட்சியில் உள்ளவர்கள் தானே பொறுப்பு! அடுத்த தேர்தலுக்குள் இந்தத் தள்ளுபடி, வேளாண் பெருமக்களின் பிரச்சனைகள் என்பதையெல்லாம் மூட்டைக்கட்டி விட வேண்டும். அதுவே நல்லாட்சிக்கு அழகு!

அடுத்து,  மின்சாரம் அத்தியாவசியம் என்பது உண்மையே. அதுவும் வேளாண் பெருமக்களுக்கு உதவும் வகையில் அமைய வேண்டும்.

மதுவிலக்கு சம்பந்தமான வாக்குறுதிகள் வரவேற்தக்கதே! தனது குழந்தைகளைக் குடிகாரர்களாக்கிவிட்டு இப்போது அவர்களுக்கு மீட்பு நிலையங்கள் அமைக்கப்படும் என்பது தாய்க்கு எவ்வளவு மனவேதனை ஏற்படுத்தும் என்பதை நாமும் உணருகிறோம்; உருகுகிறோம்!  500 டாஸ்மார்க் கடைகள் மூடப்படும் என்பது அடுத்த ஐந்து ஆண்டுகளிலா அல்லது ஓர் ஆண்டுக்கு ஐனூறா என்பது தெளிவில்லை! 

தமிழகத்தின் ஆட்சி என்பது கடனிலேயே  நடைபெறுகின்ற ஓர் ஆட்சி என்பது மக்களுக்குப் புரிகிறது. அதுவும் டாஸ்மார்க் இல்லாமல் ஆட்சி நடத்த முடியாத ஒரு நிலைமையில் தமிழகம் உள்ளது!

வேளான் பெருமக்களின் கடனைத் தள்ளுபடி செய்யலாம். ஆனால் தமிழகத்தின் கடனைத் தள்ளுபடி செய்ய முடியுமா?

இப்போது நமக்குப் புரிவதெல்லாம்  ஒன்று தான். அடுத்த முதலமைச்சராக க்ருணாநிதி வரபோவதில்லை. ஆனால் ஸ்டாலின் வருவதை ஜெயலலிதா விரும்பவில்லை!

தன்னுடைய பதவியைத் தற்காத்துக்கொள்ள இனி அவர் எதையாவது - நல்லதை - செய்யத்தான் வேண்டும். சவடால் பேச்செல்லாம் இனி எடுபடாது! இன்னொரு பக்கம் நாம் தமிழர் கட்சி. சீமானை எதிர்கொள்ள வேண்டும்.

அரசியலுக்குச் சீமானின் வரவு ஒரு புதிய பாதையைத் தமிழகத்திற்குப் போட்டுக் கொடுத்திருக்கிறது என்பது உண்மையே!

No comments:

Post a Comment