Friday 3 August 2018

என்ன ஆனார்கள்...?

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன சிலர் -  ஒரு வகையில் சமயத் தொடர்பு உடையவர்கள் என்று சொல்லலாம் - அவர்கள் என்ன ஆனார்கள் என்று இதுவரையில்  தெரியவில்லை!

உடனடியாக நமது கண் முன்னால் நிற்பது இந்திரா காந்தியின் கடைசி மகள் பிரசன்னா திக்‌ஷா! அப்பனையும் காணோம்! மகளையும் காணோம்! காவல்துறையோ "உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்!" என்கிறார்கள்! காவல்துறை சொல்லுவதைத் பார்த்தால் இவர்கள் மலேசியாவில் தான் இருக்கிறார்களா என்கிற சந்தேகமே எழுகிறது!  பிரசன்னாவின் தந்தை பத்மநாபன் எங்கு இருக்கிறார் என்கிற விபரமே காவல் துறைக்குத் தெரியவில்லையாம்! அவர் எங்காவது பிச்சை எடுக்கட்டும் பரவாயில்லை. ஆனால் மகளைக் காப்பாற்றும் பொறுப்பு அவருக்கு இருக்க வேண்டுமே! மகளைப் பள்ளிக்கு அனுப்பும் பொறுப்பும் அவருக்க இருக்க வேண்டுமே! இது ஒரு சமய மாற்றம் என்பதால் காவல்துறையால் கண்டு பிடிக்க முடியவில்லை என்று தான் நமக்குத் தோன்றுகிறது!

ரேமண்ட் கோ, ஒரு கிறிஸ்துவ சமயப்போதகர். அவர் எல்லா மதத்தினருக்கும் - அவர்கள் ஏழைகள் என்றால் - உதவுபவர் என்று பலராலும் பாராட்டப்பெற்றவர். ஆனாலும் அவர் முஸ்லிம்களை மதம் மாற்றம் செய்கிறார் என்பதாகக் கூறி அவர் சார்ந்த அனைத்து இல்லங்களையும் சோதனை இட்டனர். அப்படி மாற்றம் செய்ததற்கான அடையாளங்கள் எதுவும்  இல்லை! அதன் பின்னரே அவர் கடத்தப்பட்டார்.  அதுவும்  இராணுவம் துணை கொண்டு அவர் கடத்தப்பட்டார் என்பதாக CCTV மூலம் நமக்குத் தெரியவருகிறது. அவரைப் பற்றியான தகவலும் இது வரை வந்தபாடில்லை. சமயம் சார்ந்த விஷயம் என்பதால் காவல்துறை இன்னும் தடுமாறிக் கொண்டிருக்கிறதாகவே நமக்குத் தோன்றுகிறது!

இதில்  அம்ரி சேமாட்  என்பவர்,பெர்லிஸ் மாநிலத்தைச் சேர்ந்தவர்,  மாறுபட்ட இஸ்லாமிய போதனைகளைப் போதிப்பவர் என்பதாகக் கூறி அவர் காவல்துறையைச் சார்ந்தவர்களாலேயே கடத்தப்பட்டார் என்பதாகச் சொல்லப்படுகிறது! காவல்துறை இன்னும் தடுமாறிக் கொண்டிருக்கிறது!

இதனிடையே ஜோஷுவா, ரூத் இருவரும் கணவர் மனைவியர், கிறிஸ்துவ சமயப்போதர்கள், திடீரென நவம்பர் மாதம் முப்பதாம் தேதி 2016  அன்று காணமற் போனார்கள். அதுவே அவர்களது கடைசி நாள்.  இருவரும் இஸ்லாமிய மதத்திலிருந்து கிறிஸ்துவ சமயத்தைத் தழுவியவ்ர்கள் என்று சொல்லப்படுகிறது. காவல்துறையின் தடுமாற்றம் நமக்குப் புரிகிறது!

இவை அனைத்தும் ஏதோ ஒரு வகையில் சமயம் சம்பந்தப்பட்ட விவகாரங்கள். அதனால் தான் காவல்துறையின் தடுமாற்றம்! ஆனாலும் தவறு என்றால் தண்டனை தரலாம். கடத்திக் கொண்டு போக யாருக்கும் உரிமையில்லை.

இவர்கள் அனைவருக்கும் நீதி கிடைக்கும் என எதிர்பார்ப்போம்! அதுவரை பொறுத்துத் தான் ஆக வேண்டும்!


No comments:

Post a Comment