Friday 29 July 2022

சீன மாணவர்கள் நிலை எப்படி?

 

உயர்கல்வி என்று வரும்போது இந்திய மாணவர்கள் பெருமளவில் அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

இதிலிருந்து நமக்கு ஓரு உண்மைப் புரிகிறது.  கல்வி அமைச்சு, இந்திய மாணவர்கள் உயர்கல்வி பயிலக் கூடாது  என்கிற கொள்கையைக் கொண்டிருக்கிறதோ என்கிற ஐயத்தை ஏற்படுத்துகிறது.  காரணம் ஒவ்வொரு ஆண்டும் நமது மாணவர்கள் உயர்கல்வி என்று வரும் போது அவர்கள் பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றனர். அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை.

இன்னொன்று,  கல்வி என்று வரும் போது இந்தியர்கள் பணக்காரர்கள் என்பது  கல்வி அமைச்சின்  கருத்து.  அவர்கள் எவ்வளவு செலவு ஆனாலும் தங்களின் சொத்துக்களை விற்றாவது பிள்ளைகளைப் படிக்க வைப்பார்கள்.  அதனால் அவர்கள் பணக்காரர்கள். அரசாங்க வேலை என்றால்,  இந்தியர்கள் படிக்காதவர்கள். கல்வியறிவு இல்லாதவர்கள். டாக்டர்கள் என்றால் அரசாங்கத்தில் உள்ள டாக்டர்கள் அனைவரும் இந்தியர்கள். வழக்குரைஞர்கள் என்றால் இந்தியர்களே அதிகம்! ஏமாற்றுக்காரர்கள், குற்றவாளிகள், குண்டர்கள் என்றால் இந்தியர்கள் தான் அதிகம்.  படிக்காத காட்டுமிராண்டிகள். அதனால்  'சொஸ்மா' சட்டம் அவசியம் தேவை. இப்படித்தான் அரசாங்கம்  இந்தியர்களை வகைப்படுத்துகிறது!

ஆனால் இதற்குப் பின்னணியில்  இருக்கும் ரகசியம் என்ன தெரியமா? இந்தியர்கள் ஏழைகள். நாம் என்ன செய்தாலும் தட்டிக்கேட்க ஆளில்லை! எவ்வளவு வேண்டுமானாலும் இவர்களைத் தட்டலாம் என்பது தான்! 

சீன மாணவர்களின் நிலை என்ன?  அவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் எழவில்லை என்று தான் நினைக்க வேண்டியுள்ளது. பத்திரிக்கைகளில் செய்திகள் வரவில்லை என்றால் அவர்கள் எந்தப் பிரச்சனையையும் எதிர்நோக்கவில்லை, அவ்வளவு தான்!

அவர்கள் பணம் உள்ள சமூகம். வெளி நாடுகளில்  பலர் இந்நேரம் கல்வியை ஆரம்பித்திருப்பர்.    நம் நாட்டின் தரமற்ற கல்விக்காக அடித்துக்கொள்ள அவர்கள் தயாராக இல்லை.  ஆமாம் பத்து "ஏ" வாங்கிவிட்டு குறைவான  "ஏ" வாங்கியவர்களோடு போட்டிப்போட அவர்கள் தயாராக இல்லை! அவர்களிலும் பல ஏழைகள் உண்டு. அவர்களுக்குப் பெரும்பாலும் இடம் கிடைத்துவிடும்.   அவர்களின் அரசியல்வாதிகள் பணத்தை வைத்துக் கொண்டு காற்று புக முடியாத இடத்துக்குள்ளும் புகுந்து விடுவர்! சத்தம் இல்லாமல் அவர்கள் காரியம் ஆற்றுவார்கள்.

நம் நிலை அப்படியா? நடு வீதிக்கு வந்து அடித்துக் கொள்கிற ஒரு நிலையைத்தான் நமது அரசியல்வாதிகள் நமக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள்!

என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

No comments:

Post a Comment