Monday 11 April 2016

கேள்வி - பதில் (2)


கேள்வி

தமிழ் நாட்டை ஆளுவதற்கு சீமானுக்கு என்ன தகுதி என்று நினைக்கிறீர்கள்?


பதில்

கல்வி மட்டும் தான் தகுதி என்றால் அது அவரிடம் இருக்கிறது. பொருளாதாரம் படித்தவர். ஆனால் கல்வி மட்டுமே தகுதி என்றால் அது அரசியலுக்குத் தேவையில்லை என்பதே எனது கருத்து. அரசியலைப் பொறுத்தவரை தொண்டு தான் முதல் தகுதி.

கருணாநிதி பழந்தமிழ் இலக்கியங்களில் பயிற்சி பெற்றவர். அவர் படிக்காதவர் என்று சொல்ல முடியாது. ஜெயலலிதா ஆங்கிலக்கல்வி  வழி கல்வி பயின்றவர். படித்தவர்.

இந்த இருவர்களின் சாதனை என்ன? ஒருவர் சாராயக்கடைகளைத் திறந்தார். இன்னொருவர் இன்னும் அதனை அதிகப் படித்தினார். ஆனால் முன்னவர் காலத்தில் சாராய விற்பனை அதிகம்;  இப்போது சாராய வியாபாரம் குறைந்திருக்கிறது என்கிறார் பின்னவர்.

இப்போது இந்தத் தேர்தல் காலத்தில் 'நான் இன்னும் படிபடியாகக் குறைப்பேன்" என்று உறுதிமொழி அளிக்கிறார் பின்னவர்.சாராயக் கடைகளை இன்னும் அதிகம் திறந்துவிட்டு என் காலத்தில் சாராய விற்பனைக் குறைந்திருக்கிறது என்று தமிழ் மக்களுக்குக் கடுக்கன் போட்டுவிடுகிறார் அம்மையார்.

தமிழ் மாநிலத்தின் தாய் மொழியானத் தமிழை இருவருமே கூட்டுச் சேர்ந்து அழித்து விட்டனர்.

விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் எந்த வகையிலும் உயரவில்லை. தற்கொலைகள் தான் நிறைய நடந்திருக்கின்றன.

இவர்களின் கல்வித் தகுதி எதைச் சாதித்திருக்கிறது? ஊழல் தான் இவர்களின் சாதனை! இவர்களின் கல்வி ஊழக்குத் தான் துணை போயிருக்கிறது!

தொண்டு மட்டுமே சாதனைகள் புரியும். அந்தத் தொண்டு சீமானிடன் இருக்கிறது. அது பெருந்தலைவர் காமாரசருக்குப் பின்னர் சீமானிடம் இருப்பதே போதும்!

No comments:

Post a Comment