Saturday 16 April 2016

பெருந்தலைவர் துன் வீ.தி.சம்பந்தனார், பெரும் வெற்றியாளர்!


ம.இ.கா.வின் (மலேசிய இந்தியர் காங்கிரஸ்) மூன்றாவது தலைவராக வந்தவர் தான் துன் வீ.தி.சம்பந்தன்.

ஆளுங்கட்சியில் அங்கம் பெற்ற ம.இ.கா.வில் துன் அவர்கள் வந்த பின்னர்  தான் கட்சியின் அதிகார மொழியாகத் தமிழ் பயன்படுத்தப்பட்டது.

துன் அவர்கள் சுமார் 18 ஆண்டு காலம் மா.இ.கா.வின் தலைமைப் பீடத்தை அலங்கரித்தவர்.

துன் அவர்கள்,   தனது  காலக் கட்டத்தில் ம.இ.கா.வில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தார்.

ஆனாலும் அவருடைய அரிய - பெரிய சாதனை என்றால் அது அவர் காலத்தில் அவர் அமைத்த தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கம் தான் .வெள்ளைக்காரர்கள் தோட்டங்களை விற்று, நாட்டை விட்டு  வெளியேறினர். உள்ளூர் முதலாளிகளால் பல தோட்டங்கள் துண்டாடப்பட்டன. தோட்டங்களில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் பலர் தோட்டங்களை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை. பாதிக்கப்பட்டவர்கள் தோட்டங்களில் பணிபுரிந்த தென்னிந்திய தொழிலாளர்கள்

மிகவும் இக்கட்டானச் சூழலைச் சந்தித்தார் சம்பந்தன் அவர்கள். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தோட்டத் தொழிலாளர்கள். அப்போது அவர் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார்.

போர்க்கால நடவடிக்கை போல எடுத்தார் ஒரு முடிவை. ' ஒவ்வொரு தோட்டப் பாட்டாளியும் மாதம் பத்து வெள்ளி கொடுங்கள். நாமே தோட்டங்களை வாங்குவோம்' என்று தோட்டம் தோட்டமாக, வீடு வீடாகச் சென்று முழக்கமிட்டார்.

அது ஒரு மாபெரும் புரட்சி! அதுவரைய யாரும் கேள்விப்படாத ஒரு முயற்சி. அப்படித்தான் பிறந்தது தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கம்.

அவர் இறக்கும் போது அந்தப் பத்து பத்து வெள்ளியை வைத்தே சுமார் 18 தோட்டங்களை அவர் வாங்கியிருந்தார். அதில் கிட்டத்தட்ட 1,00,000 தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர்.

துன் சம்பந்தன் அவர்கள் வசதியான வாழ்க்கை வாழ்ந்தவர். ஆனால் அரசியல் மூலம் அனைத்தும் இழந்தவர். ஆனாலும் சமுதாயத்திற்கு ஒர் இழப்பு என்று வந்ததும் அவராகவே களத்தில் இறங்கினார். இரவு பகல் பாராமல் இந்த சமுதாயத்திற்காக உழைத்தவர்.

கூட்டுறவு சங்கம் என்பது அவரது சாதனை. இதுவரை அவருடைய சாதனையை முறியடிக்க எந்த ஒரு தலைவரும் பிறக்கவில்லை. மலேசிய அரசாங்கத்தின் மிகப்பெரிய "துன்" விருதை பெற்ற முதல் தமிழர். அத்தோடு கூட நமது நாட்டின் பிரதமரும், துணைப்பிரதமரும் நாட்டில்  இல்லாத  வேளையில் "ஒரு நாள்" பிரதமராகவும் இருந்திருக்கிறார்! அந்தச் செய்தி அவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருக்கவில்லை.

துன் சம்பந்தன் அவர்கள் பெரும்தலைவர் மட்டுமல்ல மாபெரும் வெற்றியாளர்!

1 comment:

  1. Yes great leaders conceive and concretise ideas and create institutions. Salute the great leader Sambanthan.. while visiting KL ?Petronas to give lectures I was happy to see a street named after him there.Cheers.

    ReplyDelete