Wednesday 13 April 2016

நாம் ஏழையுமில்லை! கோழையுமில்லை!



நம்மை நாமே தாழ்த்திக் கொள்ளுவதற்கு நமக்கு ஈடாக யாருமில்லை! அந்த அளவுக்கு நாம் நம்மை நாமே தாழ்த்திக் கொள்ளுகிறோம்!

நாம் ஒன்றும் அந்த அளவுக்குக் கேவலப்பட்டுப் போய்விடவில்லை. ஆனாலும் நாம் நம்மைத் தாழ்த்திக் கொள்ளுகிறோம்; ஏழை என்கிறோம்! கோழை என்கிறோம்!

நம்மால் அது முடியாது என்கிறோம்! இது முடியாது என்கிறோம்!

நம்மை விட ஒருவனை உயர்ந்தவன் என்கிறோம். ஏன்?  நாம் எங்கே தாழ்ந்து போய் விட்டோம்?

உயர்ந்தவன் உயர்ந்தவனாகவே இருக்கட்டும். நாமும் உயர்ந்தவன் தான் என்கிற மனோபாவம் நமக்கு வேண்டும்.

நாம் ஏழையுமில்லை; கோழையுமில்லை!

நமது கையில் இப்போது பத்துக் காசுக் கூட இல்லை என்பதால் நாம் என்ன ஏழையா? இப்போது தானே இல்லை! இன்னும் சில நிமிடங்களில் வரலாம். இன்னும் சில மணி நேரங்களில் வரலாம். இன்னும் சில நாள்களில் வரலாம். அவ்வளவு தானே! இதற்கு ஏன் கையில் பணம் இல்லை! நான் ஏழை என்று நான் அலட்டிக்கொள்ள வேண்டும்?

பெரிய பணக்காரர்கள் கூட சமயங்களில்  பணம் இல்லையே என்று கையைப் பிசைந்து கொண்டு இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். எல்லாம் அந்த நேரம் மட்டுமே; அதன் பின்னர் அனைத்தும் சரியாகிவிடும்!

அது தான் வாழ்க்கை. பணம் வரும்; போகும்.நாமும் அதற்கு ஏற்றவாறு மாறிக் கொள்ள வேண்டுமே தவிர, நம்மை நாமே ஏழை என்று தாழ்த்திக்கொள்ள வேண்டிய அவசியமில்லை! தலை குனிந்து - எதையோ இழந்துவிட்டது போல - கிழிந்த உடைகளோடு - மற்றவர்கள் நம்மைப் பார்த்து அசிங்கப்படும்  அளவுக்கு - நமக்கு நாமே இழிவை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது.

'பணம் இல்லாவிட்டால் என்ன? நான் எனது கம்பீரத்தை மாற்றிக்கொள்ள முடியாது'  என்று உறுதியாக இருக்க வேண்டும்.

பாட்டாளித் தோழர்களிடமிருந்து துன் சம்பந்தனார் அவர்கள் பத்து பத்து வெள்ளியாக வசூல் செய்து "தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கம்" என்னும் மாபெரும்  தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்கினார். அது மட்டுமல்லாது அவர் கட்டிய கூட்டுறவு மாளிகையும் தலைநகரில் இன்று தலை நிமிர்ந்து
நிற்கிறது. இன்றைய நிலையில் அது மட்டுமே இந்தியர்களின் சொத்து!

கையில் பணம் இல்லையென்றாலும் அவர் மனம் தளரவில்லை; தலை குனியவில்லை. ஓடி ஒளியவில்லை.'நாம் ஏழையும் இல்லை; கோழையும் இல்லை"  என்று பொங்கி எழுந்ததன் விளைவு தான் அந்தச் சாதனை!

நாம் ஏழைகளும்  அல்ல! கோழைகளும் அல்ல! சாதனையாளர்கள்!






2 comments:

  1. yes we know the historical reasons for this social and individual disease..Similar situations existed in countries in Europe..Reformations,renaissance and revolutions in thought and actions (thought leadership and scientic industrialisation) changed the social and individual fabric of these countries. We need 3 Rs.. and am sure we win prosper and glow as we did in Sangam period in Tamilnations.

    ReplyDelete
  2. Hope I can write about social and societal kinetics.. importance of collaboration competence and competition Yes this is actionable
    Cheers

    ReplyDelete