Friday, 15 April 2016

கேள்வி-பதில் (4)


கேள்வி

தமிழக ஆட்சியில் டாக்டர் கலைஞர்  அவர்களும் டாக்டர் அம்மாவும் மாறி மாறி ஆட்சியைப் பிடிக்கின்றனர். இருவருமே முன்னவர் ஆட்சியில் உருவாக்கியவைகளை அல்லது கட்டிய கட்டடங்களை அழித்துவிட்டு அல்லது உடைத்துவிட்டு புதியவைகளைக் கொண்டு வருகின்றனர்.  இதனை மக்கள் எப்படி எடுத்துக் கொள்ளுகின்றனர்?

பதில்

அவர்கள் மக்களை மக்களாகவே மதிப்பதில்லை! அதே போல மக்களும் அவர்களைப் பிணம் தின்னி கழுகுகளாகத்தான் பார்க்கின்றனர்! நாட்டை ஆளுவதற்கு இவர்களை விட்டால் வேறு வழியில்லை என்பது போன்ற ஒரு தோற்றத்தை மக்களிடையே அவர்கள் ஏற்படுத்தி விட்டனர்! அதனால் மக்களும் அவர்கள் செய்கின்ற அனைத்துக் காரியங்களையும் மன்னித்தும் மறந்தும் விடுகின்றனர்.

ஆனால் இப்போது தான் ஒரு விடிவு ஏற்பட்டிருக்கிறது; முதன் முதலாக இருவருக்கும் தலைச் சுற்ற ஆரம்பித்திருக்கிறது! மக்கள் இவர்களைத் தமிழர்கள் இல்லை,  மாறாக பக்கத்து மாநிலங்களிருந்து வந்த திராவிடத்தின் தீய சக்திகள் என்பதை இப்போது தான் புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்!

ஒவ்வொருவரும் பதவிக்கு வரும் போது:  அவர் கட்டிய சாராயக் கடைகளை இவர் உடைப்பதில்லை; இவர் கட்டிய சாராயக் கடைகளை அவர் உடைப்பதில்லை! இருவரும் அந்தச் சாராய விற்பனையில் மட்டும் ஒத்துப் போகின்றனர். தமிழர்களைக் குடிகார சமுதாயமாக மாற்றி அமைப்பதில் இருவருக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை!

ஆனால் ஒரு மாபெரும் நூலகத்தையே தகர்த்தெறிந்தாரே அம்மையார் அதனை நாம் அவ்வளவு எளிதில் மறக்கவோ மன்னிக்கவோ முடியாது! அறிவு தெளிவுக்குத் தான் நூலகம். தமிழன் அறிவு பெறக் கூடாது என்பதில் அவர் காட்டிய  தீவிரம்  மன்னிக்க  முடியாதத் துரோகம்!

பொதுவாக இருவருமே தமிழ் மக்களின் விரோத சக்திகள்!

No comments:

Post a Comment