Friday 22 April 2016

பாலாபிஷேகமா? தையல் இயந்திரங்களா?


சினிமா சம்பந்தப்பட்ட இரண்டு செய்திகள் நமக்கு நல்ல செய்திகளாகவே படுகின்றன: தேவையானதும் கூட.

பெங்களூருவில் ரஜினியின் படங்கள் வெளியிடப்படுகின்ற நேரத்தில் அவரது பட பதாகைகளுக்கு ரஜினியின் தீவிர ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்வது என்பது மிகவும் கேவலமான ஒரு செயல். பாலாபிஷேகம் என்பது கடவுள் சிலைகளுக்குச் செய்வது வேறு. ஒரு மனிதருக்குச் செய்வது என்பது வேறு.ஒரு மனிதரைக் கடவுளுக்கு ஒப்பிடுவது கண்டிக்கத்தக்கது. இது ஒரு மனிதரைக் கேவலப்படுத்துவதற்கு ஒப்பாகும்.

எத்தனையோ வருடங்களாகத் தொடருகின்ற இந்த பாலாபிஷேகத்தை நாம் சொல்லாமலேயே ரஜினி அவரது ரசிகர்களைக் கண்டித்திருக்க வேண்டும். அவர் இதனைக் கண்டு கொள்ளவில்லையா அல்லது அவர் அதனை விரும்புகிறாரா என்று நமக்குப் புரியவில்லை.

இப்படிப் பல லிட்டர் பாலை வீணடிப்பதைத் தவிர்த்து அதே பாலை கொஞ்சம் ஆக்ககரமான வகையில் பயபன்படுத்த ர்ஜினி அவரது ரசிகர்களைக் கேட்டுக் கொண்டிருக்கலாம். குறிப்பாக ஏழைகள் பயன்பெறுமாறு செய்யலாம். எத்தனையோ வழிகள் இருக்கின்றன.

இப்போது நீதிமன்றம் ரஜினிக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியிருக்கிறது. எதிர்காலத்தில் ரஜினி இதனைத் தவிர்க்க வழிவகைகளைத் தேட வேண்டும்.

யாழ்ப்பாண விஜய் ரசிகர்கள் பாராட்டப்பட வேண்டியவர்களே! அவர்களது தவறுகளை அவர்கள் உணர்ந்து விட்டனர்.

பாலாபிஷேகம் செய்வதைவிட அவர்களது பார்வையை வேறு பக்கம் திருப்பி இருக்கின்றனர். வரவேற்கத்தக்கதே!

ஏழை மாணவர்களுக்கு உதவிகள் செய்திருக்கிறார்கள். குடும்பப் பெண்களுக்குத் தையல் இயந்திரங்களை வழங்கியிருக்கின்றனர், பராட்டத்தக்க பணிகள்! நல்லதே நடக்கட்டும்!

சினிமா நடிகர்களுக்கு ரசிகர்கள்  இருக்கலாம். அதுவும் தீவிர ரசிகர்கள் இருக்கலாம். இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால்  அவர்கள் பெயரில் ஏதாவது செய்ய அவரது ரசிகர்கள் விரும்பினால் அது சமுதாயத்திற்குப் பயனுடையவையாக இருக்கட்டும்!

விஜய் ரசிகர்கள் பாராட்டுக்குரியவர்கள்! வாழ்க! வளர்க!


No comments:

Post a Comment