Wednesday 13 April 2016

கேள்வி-பதில் (3)



கேள்வி

தமிழ் மாநிலத்தை தமிழர் மட்டும் தான் ஆள வேண்டும் என்பது இனத் துவேஷம் இல்லையா?

பதில்

இதனையே மற்ற மாநிலங்களிலும் கேட்கலாம். ஆந்திராவை ஒர் தெலுங்கர் ஆளுவது, கேரளாவை ஒரு மலையாளி ஆளுவது, கர்நாடகாவை ஒர் கன்னடர் ஆளுவது - இவைகளெல்லாம் இனத்துவேஷம் தானே? அது இனத்துவேஷம் இல்லையென்றால் தமிழ் நாட்டை தமிழர் ஆளுவது இனத்துவேஷம் இல்லை.

இந்தியாவிலுள்ள அத்தனை மாநிலங்களும் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த பூர்விகக்கூடியினரே ஆளுகின்றனர். தமிழர் நாட்டை  தமிழர் தான் ஆளுவது என்பது இனத்துவேஷம் அல்ல.

இத்தனை ஆண்டுகள் - சுமார் 50 ஆண்டுகளாக - திராவிடர்கள் தான் ஆளுகின்றனர். தமிழர்களால் செய்ய முடியாததை அப்படி என்ன அவர்கள் செய்து விட்டனர்? சும்மா, வெறும் பூஜ்யம் தான்!

செய்யாவிட்டால் கூடப் பரவாயில்லை. தமிழகத்துக்குத் துரோகம் செய்திருக்கிறார்கள்.

கச்சத் தீவை - ஏதோ ஒரு சினிமாப்படத்தை சன் தொலைக்காட்சிக்கு விற்றுத் தீர்த்தது போல - விற்றுத் தீர்த்துவிட்டார்கள்! யார் வீட்டு அப்பன் சொத்தை யார் விற்கிறார் பாருங்கள்.  உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்வது இது தானே?

இரண்டு கேரள  மீனவர்கள்  இத்தாலியக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டதைப் பார்த்து கேரள அரசாங்கம்  பொங்கி எழுந்ததே! ஐநூறுக்கு மேற்பட்ட தமிழக மீனவன் செத்தானே ஏதாவது நடந்ததா? காரணம் அவன் தமிழன்;  எங்கள் திராவிடத் தலைவர்கள் சினிமா ஷூட்டிங் பார்த்துக் கொண்டிருந்தார்கள்! அவர்களுக்கு நேரமில்லை! இவர்கள்  துரோகிகள் தானே!

இவர்கள் செய்தது தானே இனத் துவேஷம்!

இன்னும் பல!

தமிழ் மாநிலத்தைத் தமிழன் தான் ஆள வேண்டும் என்பதற்கு இந்தக் காரணங்களே போதும்.








No comments:

Post a Comment