Friday 22 April 2016

வர்த்தகம் செய்வோம்! வான் வெளிகளையும் ஆராய்வோம்!


நாம் வர்த்தகர்கள். வர்த்தகம் செய்யும் இனம். திரை கடல் ஓடி திரவியம் திரட்டியவர்கள்.

வர்த்தகம் நமது பலம். வர்த்தகத்தை மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுத்தவர்கள். வர்த்தகத்தை உலகளவில் கொண்டு சென்றவர்கள்.

வர்த்தகம் என்பது நமக்குப் புதிதல்ல. புதியவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தவர்கள். வர்த்தகத்தின் ஆசான்கள்.

இன்று அந்த வர்த்தகத்தை நாம் பமறந்து விட்டோம். வேலை செய்வது தான் பிழைப்புக்கு வழி என்று ஒரு புதிய சிந்தனையை ஏற்றுக் கொண்டோம்.

வெள்ளைக்காரர்கள் வர்த்தகத்துக்கான் வந்தார்கள். வர்த்தகத்தை அவர்கள் கைக்குக் கொண்டு வந்து விட்டார்கள். நம்மை அவர்கள் மொழியைப் படிக்க வைத்து வேலைக்காரராக மாற்றி விட்டார்கள்!

ஆனால் எதுவும் வீண் போகவில்லை. காலம் கடந்து விடவில்லை.

வர்த்தகம் என்பது நமது ரத்தத்தில் ஊறியது. அதனை அவ்வளவு எளிதில் நம்மிடமிருந்து பிரித்துவிட முடியாது.

ஏன்? நமது மலேசிய நாட்டில் கூட - நாம் சஞ்சியில் வந்த போது கூட - நாம் நமது வர்த்தகத்தை  விடவில்லை. நாம் நமது வியாபாரங்களை அப்படி ஒன்றும் அம்போ என்று விட்டுவிட வில்லை.

அன்று அந்தத் தோட்டப்புறங்களில் வாழ்ந்த போது கூட சிறு சிறு வியாபாரங்களைச் செய்து கொண்டு தான் வந்தோம்.

காய்கறி வியாபாரம் செய்தோம். காலைப் பசியாறலுக்கான பலவித காலைச் சிற்றுண்டிகளைச் செய்தோம். தோசை, இடியப்பம், புட்டு என்று பலவித தின்பண்டங்களைச் செய்தோம். சேலை, துணிமணிகளை வியாபாரம் செய்தோம். தையற்கடைகளை வைத்து ஆடைஅணிகலன்களைத்
 தயாரித்துக் கொடுத்தோம்.

இவைகளெல்லாம் சிறு வியாபாரங்கள் தானே என்று அலட்சியப்படுத்தி விட முடியாது. இங்கிருந்து தான் பெரும் பெரும் வியாபாரங்கள் தொடங்கபட்டன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இன்று பிரபலமாக இருக்கும் உணவகங்கள், துணி வியாபாரங்கள் அனைத்தும் தொடக்கம் இங்கிருந்து தான் ஆரம்பாகின.

இன்று நாம் பெரும் பெரும் வியாபாரங்களில் ஈடுபட்டிருக்கிறோம். இன்னும் நாம் இதனை அதிகப்படுத்த வேண்டும் என்பது ஒன்று. வர்த்தகத்தில் நமது எண்ணிக்கையை இன்னும் கூட்ட வேண்டும் என்பது மற்றொன்று.

இப்போது வான் வெளியில் நமது வான் ஊர்திகள் பறக்கின்றன. அத்தோடு நாம் திருப்தி அடைந்து விடக்கூடாது. வான்  வெளிகளிலும் சென்று நமது வர்த்தகங்களை நாம் நிறுவ வேண்டும்.

திரைக்கடல் ஓடித் திரவியம் தேடியவனுக்கு வான் வெளி சென்று வர்த்தகம் செய்ய முடியாதா? முடியும். அந்நாள் வரும்! வர்த்தகம் செய்வோம்! வளம் பெறுவோம்!

No comments:

Post a Comment