Sunday 10 April 2016

தமிழ்வாணனின்: "என் தலையாய பணி"

ஒரு மனிதனுடைய தீவிரமான ஆர்வம் எதுவாய் இருந்தாலும்,வாழ்க்கையில் அது நிறைவேறியே தீரும் என்பது இயற்கையின் சட்டம்.

 மக்களை அவர்களுடைய முன்னேற்றுத்துக்கு ஏற்ற வகையில் மேலும் மேலும் ஊக்குவித்துக் கொண்டிருப்பைதையே, என் வாழ்க்கையில் நான் என்னுடைய தலையாய பணியாகக் கடைப்பிடித்து வருகிறேன்.

 பிறரை அவமதிப்பவன், தானே அவமானத்திற்கு ஆளாகிறான். பிறரை மதித்து நடப்பவன், தானே மதிப்புக்கு உரியவன் ஆகிறான்.

 பிறரை ஊக்குவிப்பதன் மூலம் என்னால் எப்போதும் ஊக்கம் உடையவனான விளங்க முடிகிறது.

 நாம் பிறருக்குச் செய்யும் நன்மைகள் தாம் ஒன்றுக்குப் பத்தாய் நமக்குத் திருப்பி வருகின்றன

 நீங்கள் ஊக்கம் மிகுந்தவர்களாய் ஆக விரும்பினால் எல்லாரையும் ஊக்குவித்துக் கொண்டிருங்கள். அப்போது உங்களால் ஊக்குவிக்கப்படுபவர்களும் உயர்வு அடைவார்கள். நீங்களும் உயர்வு அடைவீர்கள்.

 ஊக்கம் ஒன்று தான் மனிதனுக்கு உயர்வை அளிக்கிறது,முன்னேற்றத்தைத் தருகிறது என்று அன்றைய திருவள்ளுவரிலிருந்து இன்றைய டேல் கார்னெகி வரையில் எல்லாரும் சொல்லுகிறார்கள்.  

 என்னுடைய எழுத்துக்களின் மூலம் என் வாசகர்களின் அவநம்பிக்கையைப் போக்குவதையே, வாழ்க்கையில் நான் என் தலையாய பணியாகக் கொண்டிருக்கிறேன்.

  நமக்கு ஏற்படுகின்ற ஏமாற்றங்கள் தான் நாம் முற்றிலும் புதிதான ஒரு வாழ்க்கையைத் தொடங்குவதற்கு,நமக்கு அடிகோலியாக அமைகின்றன. அந்த ஏமாற்றங்கள் ஏற்படாதிருந்தால், நாம் மீண்டும் செக்குமாடுகள் மாதிரிப் பழைய தடத்திலேயே சுற்றிச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருப்போம்.


என்னுடைய வாசகர்களை பல வகைகளிலும் இடையறாது ஊக்குவித்துக் கொண்டிருப்பதையே, நான் இறைவனுக்குச் செய்யும் திருத்தொண்டாக எண்ணிக்கொண்டிருக்கிறேன்!

வாழ்க ஊக்கம்! வளர்க நம்பிக்கை!
                                                                            
 துணிவே  துணை!
                                                                                                                                                    (குறிப்பு: தமிழ்வாணன் அவர்கள் எனது மானசீகக் குரு. அவரின் "என் தலையாய பணி" என்னும் கட்டுரையிலிருந்து இந்தப் பகுதிகள் எடுக்கப்பட்டன. எனது ஆரம்பம் எனது குருவாக இருக்க வேண்டும் என்பதால் இதனை நான் பயன் படுத்தியிருக்கிறேன்.)

No comments:

Post a Comment