Monday 18 April 2016

கேள்வி-பதில் (6)



கேள்வி

முதலைமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் இப்போதெல்லாம் தமிழக மண்ணில் காலை பதிக்காமல் கோட்டையில் இருந்து கொண்டே கணினி மூலம் சாரயக்கடைகளைத் திறப்பதும், திறப்பு விழாக்களை நடத்துவதும் அதனைப் பார்த்து அவருடைய அமைச்சர்கள் பெருமிதம் அடைவதும் அவர்களோடு சேர்ந்து நாமும் புளகாங்கிதம் அடைந்தோம்! அவருடைய தேர்தல் பணிகளும் கணினி மூலமே நடைபெரும் என எதிர்ப்பார்த்த நமக்கு ஒர் அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டாரே!  தீடீரென வாகனத்தில் வலம் வருகின்றாரே!

பதில்

தீடீரென நடக்க ஆரம்பித்து விட்டார் என நினைக்கிறீர்களா?  இல்லை!  அது அவருடைய உருவ பொம்மையாகக் கூட இருக்கலாம்! திராவிடர்கள் அரசியலில் எதுவும் நடக்கும்!

ஆனாலும் ஒன்றைக் கவனிக்க வேண்டும். அவர் கிழே இறங்கித் தேர்தல் வேலைகளைக் கவனிக்கவில்லை. தமிழக மண்ணில் அவர் கால் பதியவில்லை! தமிழ் மண்ணை மிதிப்பதையோ,  தொடுவதையோ அவர் விரும்பவில்லை! தமிழ் மண்ணைத் தொடுவதைக் கூட அவர் விரும்பவில்லை. கையில் உறைப் போட்டுத்தான் தமிழ் மண்ணைத் தொடுகின்றார்!

இனித் தமிழ் நாட்டில் தனக்கு எதிர்காலம் இல்லை என்று குமுற ஆரம்பித்துவிட்டார் அம்மையார்.  தமிழ் மக்களை ஒரு பெரிய குடிகாரக் கூட்டமாக ஆக்கிய பெருமை அம்மையாருக்கு உண்டு!

தனக்கு அரசியல் பதவி இல்லையென்றால் தனது காலில் யாரும் விழப்பொவதில்லை!  இனி அந்தப் பழைய மரியாதைகள் கிடைக்கப் போவதில்லை என்று அவருக்குத் தெரிந்து விட்டது!

சாராயக்கடைகளின் தாய்! தமிழர்களின் எதிரி!

No comments:

Post a Comment