Monday 11 April 2016

டாக்டர் ஸாகிர் நாய்க்




இஸ்லாமிய சமயச் சொற்பொழிவாளர் டாக்டர் ஸாகிர் நாய்க் அவர்களின் அண்மையில் நடபெறவிருந்த சமயச் சொற்பொழிவை  அரசாங்கம் ரத்து செய்திருக்கிறது என்று காவல் துறைத் தலைவர் காலிட் அபு பக்கர் அவர்களின் அறிவிப்பு வரவேற்கத்தக்கதே.

இன்னும் மலாக்காவில் நடைபெறவிருக்கிற நிகழ்ச்சியும் .ரத்து செய்யபடுவதாக அவர் அறிவித்திருக்கிறார். வரவேற்கிறோம்.

ஆனாலும் அவருடைய சொற்பொழிவுகளுக்கு அரசாங்கம் தடை செய்யவில்லை. எதுவும் மாறலாம். இந்த நிலையும் மாறலாம்.. காரணம் டாக்டர் ஸாகிர் அவர்களின் சொற்பொழிவுகள் நடைபெறு வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றன.

இதில் தீவிரமாக இருப்பவர்கள் நமது இஸ்லாமிய தமிழ்ச் சகோதரர்கள் தான் என்பது வருத்தத்திற்குறியதே.

டாக்டர் ஸாகிர் இஸ்லாமின் பெருமைகளைப் பற்றி எத்தனை சொற்பொழிவுகள் வேண்டுமானாலும் ஆற்றலாம். அதனை யாரும் குறைச் சொல்லப் போவதில்லை. ஆனால் இந்து மதத்தைக் குறி வைத்துத்  தாக்குவது என்பது இவரைப் போன்ற இஸ்லாமிய அறிஞர்களுக்கு ஏற்புடையதல்ல.

ஏற்கனவே - சில ஆண்டுகளுக்கு முன்னர் - இங்குள்ள இந்து மதத்தினர் இவரின் சொற்பொழிவுகளுக்குக் கொடுத்த எதிர்ப்பினை யாவரும் அறிவர்.

எனினும், இவரைத் தொடர்ந்து வர அனுமதிப்பதும் பிறகு இங்குள்ள இந்து மதத்தினர் அதனைத் தொடர்ந்து எதிர்ப்பதும் எந்த வகையிலும் நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல.

தனது தாய் நாடான இந்தியாவில் செய்ய முடியாததை இங்கு வந்து செய்ய நினப்பது இஸ்லாமிய அறிஞரான டாக்டர் ஸாகிருக்கும் இது உகந்ததல்ல!

நாட்டின் அமைதி முக்கியம். அது தொடர எல்லாத் தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும். வாழ்க மலேசிய!


No comments:

Post a Comment