Sunday 17 April 2016

கேள்வி - பதில் (5)



கேள்வி

பெருந்தலைவர் காமராசர் ஆட்சிவரை இலஞ்சம், ஊழல் என்னும் சொல்லே பயன்படுத்தப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. அது எங்கிருந்து முளைத்து வந்தது?


பதில்

உண்மை தான். காமராசர் மட்டும் அல்ல. அதன் பின்னர் பக்தவத்சலம் அவர்களும் 1966 வரை தமிழக முதல்வராக இருந்திருக்கிறார்.

இலஞ்சம் என்பது தி.மு.க. ஆட்சியில் தான் அரியணையேறி இருக்கிறது!அறிஞர் அண்ணா அவர்கள் 1967-ல் தமிழக முதல்வராக பதவி ஏற்றார். அதன் பின்னர் தான் ஊழல் ஆரம்பம்!  அண்ணாவின்  ஆட்சியில் முதல் ஊழல் குற்றச்சாட்டு கலைஞர் கருணாநிதி மேல் தான்! தமிழக  சரித்திரத்தில் ஊழல் என்னும் தரித்திரம்  அங்கிருந்து தான்  ஆரம்பமாகிறது.

கலைஞர் தனது எழுத்து ஆற்றலாலும், பேச்சாற்றலாலும் தமிழ் நாட்டு இளைஞர்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த நேரம் அது! அத்தோடு அவருக்குப் பதவியும் சேர்ந்து கொண்டது! சொல்லவா வேண்டும்? செய்கிற தவறுகளை - ஊழல்களை - அரசியல் பலத்தால் மிக எளிதாக மூடி மறைக்க முடிந்தது!

எல்லாவற்றுக்கும் ஒரு காலமுண்டு. இனி அவருடைய எழுத்தாற்றல், பேச்சாற்றல் அனைத்துக்கும் மரியாதை கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது!

மேலும் இனி அவருக்கு அரசியல் பலம் என்பது கானல் நீர்!  இது திராவிடக் கட்சிகளின் கடைசி காலம்!


No comments:

Post a Comment