Thursday 21 April 2016

கேள்வி - பதில் (7)



கேள்வி

மு.கருணாநிதி அவர்கள் தமிழர்களால்  தமிழறிஞர் என்று போற்றப்பட்டவர். ஆனால் அவர் செய்த காரியங்கள் அனைத்தும் ஒரு தமிழறிஞர் செய்கின்ற காரியங்களாக இல்லையே!

பதில்

உண்மையே! அவரைத் தமிழறிஞர் என்று சொன்னவர் யார்?  எல்லாமே அவர் கட்சிக்காரர்கள் தாம்.

தமிழறிஞர் என்றால் அது தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத ஐயர்,  டாக்டர் மு.வரதராசனார் இன்னும் பல பேராசிரியப்  பெருமக்கள் உள்ளனர். அவர்கள் தான் தமிழ் அறிஞர்கள்.

மு.கருணாநிதி அவர்களைத் தமிழ் அறிஞர் என்று ஏற்றுக் கொண்டாலும் அவர் செய்தவை அனைத்தும் எந்தத் தமிழ் அறிஞர்களும் செய்யத் துணியாதவை. தமிழ் மண் அவரை வாழ வைத்தது; அவரை வளர வைத்தது. அவருக்கு வாழ்க்கைக் கொடுத்தது. தமிழ் அவருக்குச் சோறு போட்டது.  தமிழர்கள் தமிழகத்தின் தலைமைப் பீடத்தைக் கொடுத்து அவரை அழகு பார்த்தார்கள்.

ஆனால் தமிழர்களுக்குக் கைமாறாக அவர் என்ன செய்தார்? தமிழ் மொழியையே முற்றிலுமாகத் துடைத்தொழித்தார். தமிழ் மண்ணையே அங்குலம் அங்குலமாகச் சுரண்டி எடுத்தார். ஆற்றுமணலைத் தோண்டி எடுத்து கோடிக்கணக்கில் சம்பாதித்தார். சாராயக்கடைகளைத் திறந்து கோடிக்கோடியாகச் சம்பாதித்தார். ஒன்றரை இலட்சம் தமிழர்களைச் சிங்களவன் சுட்டுக்கொன்ற போது -  அமைச்சர் பதவிக்காக - மத்திய அரசோடு பேரம் பேசிக் கொண்டிருந்தார்.  தமிழக மீனவர்களை இலங்கைப் படையினர் சுட்டுக்கொன்ற போது வழக்கம் போல கடிதம் எழுதிக் கொண்டிருந்தார்.

ஒரு அறிஞர் செய்கின்ற காரியமா அது?  ஒர் அரசியல்வாதியின் பச்சை அயோக்கியத்தனமல்லவா! அவர் தமிழறிஞர் அல்ல! ஒரு வடிகட்டிய அரசியல்வாதி! தமிழினத் துரோகி!

No comments:

Post a Comment