Friday, 22 April 2016

என்னமோ இருக்கேன்...!



நம்மில் பலர் இப்படித்தான் பேசி பழக்கம். எதற்கெடுத்தாலும்: என்னமோ இருக்கேன்...! என்னமோ ஓடிக்கிட்டிருக்கு...! என்னமோ...!  என்னமோ...!

இவர்கள் பேசும் போதே ஏதோ ஒரு சலிப்பு...!  ஏதோ ஒரு விரக்தி....! உண்மையில் கொஞ்சம் உன்னித்துப் பார்த்தால் இவர்களுக்கு எந்தவித பிரச்சனையும் இருக்காது!  நல்லபடியாகவே இருப்பார்கள்.

ஆனாலும் தங்களுக்கு ஏதோ ஆயிரக்கணக்கானப் பிரச்சனைகள் இருப்பது போலவும்,  கடவுள் தங்களை மட்டும் தேர்ந்து எடுத்து சோதிப்பது போலவும் கொஞ்சம் அதிகமாகவே  அலட்டிக் கொள்ளுவார்கள்!

இவர்கள் ஆபத்தான மனிதர்கள். மற்றவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் மனிதர்கள்.

தங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பது மற்றவர்களுக்குத் தெரிந்தால் மற்றவர்கள்  "கண்பட்டு" விடும் என்று நினைக்கும்  மனிதர்கள். அதற்காகவே இவர்கள் தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதைக் கூட வெளியே காட்டிக்கொள்ளாத மனிதர்கள்!  

அவர்களும் மகிழ்ச்சியாக இருப்பதில்லை. மற்றவர்களும் மகிழ்ச்சியுடன் இருக்கக்கூடாது என்று நினப்பவர்கள்.

இவர்கள்  சலிப்பையும், ஒருவித விரக்தியையும் எப்போதுமே மற்றவர்களுக்குப் பரப்பும் நோக்கத்துடனயே செயல்பட்டுக் கொண்டிருப்பார்கள்.

கவனம்! இந்த உலகில் எல்லா மனிதர்களுக்கும் பிரச்சனைகள் உள்ளன. பிரச்சனைகள் வரும் போவும். அது ஒரு பக்கம் இருக்கட்டும். மற்றவர்கள் தங்கள் சலிப்புக்களையும், விரக்திகளையும் நம்மீது திணிக்காமல் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

நமது பிரச்சனைகளை நாம் தீர்த்துக் கொள்ளலாம். நமது சலிப்புக்களை நாம் மறந்து விடலாம். நமது விரக்திகளை நாம் விரட்டி விடலாம்.

ஆனால் இந்த சலிப்புக்களையே தங்களது வாழ்க்கையாக்கிக் கொண்டவர்களை நாம் அருகில் நெருங்கமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

என்னமோ இருக்கேன் இல்லை! நன்றாகவே இருக்கேன்!




No comments:

Post a Comment