Friday 7 July 2017

கேள்வி - பதில் (49)


கேள்வி

ரஜினி அரசியலுக்கு வருவாரா என்பது பற்றி இன்னும் முடிவெடுக்க வில்லையா?


பதில்

இன்னும் பேச்சு மூச்சு எதனும் அவர் பக்க இருந்து வரவில்லை. பார்த்தால் அவர் மீண்டும் பழைய நிலைக்கே போய்விட்டார் என்று தான் சொல்லத் தோன்றுகிறது; அப்படி இல்லாமலும் இருக்கலாம். காரணங்கள் பல.

முதலாவது: அவர் இப்போது இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்போது வாய் திறந்தால் அவருடைய படங்கள் பாதிக்கப்படலாம்.  அதனால் இப்போது அவர் வாயைத் திறக்கக் கூடாது என்பதாகத் தயாரிப்பாளர்கள் அவருக்கு வாய்ப்பூட்டு போட்டிருக்கலாம்.

இரண்டாவது: அவர் எதைப் பேசினாலும் அதனை ஊடகவியாளர்கள், அரசியல்வாதிகள் ஆகிய அனைத்துத் தரப்பும் ஆதரித்தும் எதிர்த்தும் எழுதியும், பேசியும் பிரச்சனைகளை உருவாக்குகின்றனர். அதற்கு ஒன்றும் பேசாமல் இருப்பதே நல்லது என்று அவர் நினைக்கலாம். அவர் பேசாமல் இருந்தால் அதனையும் ஒரு பிரச்சனையாக்கி விவாதத்திற்கான பொருளாக்கி விடுகின்றனர் தொலைக்காட்சியினர்.

மூன்றாவது:  அவர் பேசுவதை ஊடகங்கள், அரசியல்வாதிகள்  முழுமையாகப் போடுவதில்லை; பேசுவதில்லை. அவர்களுக்கு எது தேவையோ அதனை மட்டும் எடுத்துக்கொண்டு விவாதம் செய்கின்றனர். அதனால் அவர் சொல்ல வந்தது எதுவும் மக்களுக்குப் போய்ச் சேருவதில்லை. ஒரு பக்கம் அவரைக் கெட்டவராக  இன்னொரு பக்கம் அவரை நல்லவராகக் காட்டும் வேலை தான் நடக்கிறது. 

இதனாலேயே அவர் "எதற்கு வம்பு" என்று மௌனியாக இருக்கலாம். ஒரு வேளை அரசியலுக்கு வந்த பிறகு பேசுவதை வைத்துக் கொள்ளலாம் என்று அவர் நினைக்கலாம். 

நாம் சொல்ல வருவதெல்லாம் இது தான்: அவர் அரசியலுக்கு வந்து தமிழ் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்று நினைத்தால் அவரால் தமிழ் நாட்டுக்கு நல்லது நடக்கும். அவர் பா.ஜ.க. வுக்குச் சேவை செய்ய வேண்டுமென்று நினைத்தால் அவர் அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது.

முடிவு அவர் கையில்!


No comments:

Post a Comment