Sunday 9 July 2017

கேள்வி - பதில் (50)



கேள்வி


ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா மீண்டும்   உச்சநீதிமன்றத்தில் 
மிருகவதை நடந்துள்ளதாக புதிய மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளதே?


பதில்

ஆமாம்! அத்தோடு மட்டும் அல்ல.  தமிழக அரசின் மிருகவதைத் திருத்தச்  சட்டத்தை ரத்து செய்யவும் கோரியுள்ளது. இனி அடுத்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்துவதில் ஏதேனும் பிரச்சனை வருமா என்று தெரியவில்லை.  இப்போதைக்கு ஜல்லிக்கட்டு ஆடி ஓடி அசந்து போனதால் ஒரு சத்தமும் ஜல்லிகட்டு ஆர்வலர்களிடமிருந்து வரவில்லை. அவசரப்பட ஒன்றுமில்லை. இனி ஐந்து ஆறு மாதங்கள் இருக்கின்றன என்பதால் அதன் எதிரொலி வர தாமதமாகலாம். இவர்களின் தாமதம் அவர்களின் வெற்றியாகக் கூட இருக்கலாம்.  பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

சட்டம் என்ன சொல்லுகிறது என்று தெரியவில்லை. தமிழக அரசின் மிருகவதைச் சட்ட்த் திருத்தத்தை   ரத்து  செய்யும் அதிகாரம் யாருக்கு உண்டு  என்பது தெரியவில்லை. ஆனால் அப்படி  உண்டு என்பதால் தான் பீட்டா அப்படி ஒரு கோரிக்கையை முன் வைத்திருக்கிறது என்று நம்பலாம். காரணம் நல்லதைச் செய்ய நாலு பேர் இருந்தால் கெடுதலைச் செய்ய ஒரு எட்டு பேராவது இருப்பான்!

இம்முறை பீட்டா கொஞ்சம் கூடுதல் பலம் பெற்றிருக்கிறது என்பது கவனத்திற்குரியது. தமிழ் நாடு இப்போதைக்கு ஒரு பலவீனமான அரசாங்கத்தைக் கொண்டிருக்கிறது.  எப்படிப் பார்த்தாலும் அது பா.ஜ.க. வின் கிடுக்கிப் பிடியில் ஊசாலாடிக் கொண்டிருக்கிறது. பா.ஜ.க.  எதைச் சொன்னாலும் "ஆம்" என்று தலையாட்டுவதற்கு அ.தி.மு.க.வினர் வரிசையில் நிற்கிறார்கள். பீட்டா என்றாலும் பா.ஜ.க. என்றாலும் ஒன்று தான். இந்த நேரத்தில் பா.ஜ.க. என்றாலும் சரி பீட்டா என்றாலும் சரி அவர்களது காரியங்களைச் சாதித்துக் கொள்ளுவார்கள். எதிர்ப்பைக் காட்டினால் காவல்துறையை வைத்து இளைஞர்களை அடக்கிவிடுவார்கள்!

ஆக, இம்முறை பீட்டா வின் கை ஓங்கியிருக்கிறது என்பதில் ஐயமில்லை. இங்கு நீதி, நியாயம் எல்லாம் பா.ஜ.க. பார்க்கப் போவதில்லை. இன்றைய நிலையில் தமிழகத்தில் என்ன என்ன காரியங்கள் சாதிக்க முடியுமோ அத்தனையையும் பா.ஜ.க. சாதித்துக் கொள்ளும். அதில் ஜல்லிக்கட்டும் ஒன்று.

பொறுத்திருந்து பார்ப்போம்!

No comments:

Post a Comment