Tuesday 21 August 2018

கேள்வி - பதில் (84)

கேள்வி

கேரளாவில் வெள்ளம் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விட்டதே?

பதில்

உண்மை தான்.  வரலாறு காணாத வெள்ளம். 87 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்படி ஒரு பாதிப்பை இந்த வெள்ளம் கேரளாவை சின்னாபின்னாமாக்கி விட்டது.

இப்படி மழை பெய்யும் என எதிர்ப்பார்க்காததால் எந்த முன்னெச்சரிக்கை  நடவடிக்கையும் அரசாங்கத்தால் எடுக்க முடியவில்லை. அதுவும் கடந்த சில ஆண்டுகளாக எதிர்பார்த்த அளவு மழை இல்லாததால் இந்த ஆண்டும் இப்படித்தான் இருக்கும் என எதிர்பார்த்தது பிழையாய்ப் போனது.  

இது இயற்கையின் சீற்றம். யார் என்ன செய்ய முடியும்?  "கடவுளின் தேசம்" என்று விளம்பரப்படுத்துவதால் மட்டும் கடவுளின் சீற்றம் இல்லாமல் போய் விடுமா? அதனை வாழ்ந்து காட்ட வேண்டும். கடவுளின் தேசம் என்பது சாதாரண வாசகம் அல்ல. அதனைச்  சும்மா ஒரு விளம்பரத்திற்காக கடவுளின் தேசம் என்று கடவுளின் பெயரைப் பயன்படுத்துவது மிகவும் தவறு. 

அது சரி. கடவுளின் தேசம் என்பதற்கு கேரளா சரியான உதாரணமா? இல்லை!  வெறும் கோவில்கள் மட்டுமே கடவுளின் தேசம் ஆகிவிடாது. மனிதனும் கோவிலாக மாற வேண்டும். அதெல்லாம் கேரளாவில் நடக்கக் கூடிய காரியம் அல்ல. கேரளாவில் பிறந்து வளர்ந்து, கல்வி கற்று, பட்டதாரி ஆன  தமிழர் ஒருவர் சொல்லுகிறார்:  "அது ஏனோ தெரியவில்லை! மற்ற இனத்தவனை  பார்த்தாலே கதவை இழுத்து மூடுகிறான்!  அவனிடம் மனிதம் என்பதே இல்லை!" 

சரி,  அதை விடுவோம்.மாந்திரீகம் என்றால் மலையாள மாந்திரீகம் தானே! மலையாள மாந்திரீகம் என்பது இந்தியாவில் மிகவும் பிரபலம்.  இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திற்கும் இல்லாத பெருமை இந்த மாந்திரீகம் மலையாள தேசத்திற்கு மட்டும் உரியது அல்லவா!  மாந்திரீகம், வசியம், பில்லி சூன்யம் என்கிற வார்த்தைகள் உச்சரிக்கும் போது மலையாள தேசமும் சேர்ந்து தானே வருகிறது?  அதற்கு இன்னொரு பெயர் என்ன?   தீய சக்திகளின்  தேசம் என்று சொல்ல வேண்டும்! ஆனால் என்ன செய்வது வெறும் நீர் வளங்களை வைத்துக் கொண்டு  கட்வுள் தேசம் என்று சொல்லுவது  இறைவனை அவமதிப்பது  ஆகாதா! அது இறைவனை தூஷிப்பதற்குச் சமம் அல்லவா.

இருந்தாலும் அதனை அவர்கள் தான் சரி செய்ய வேண்டும். அவர்கள் அவர்களாகத்தான்  இருப்பார்கள். நாம் செய்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால் இன்றைய நிலையில் அவர்களின் ஓலம் நமக்குக் கேட்கிறது. வீடுகளை இழந்து, உறவுகளை இழந்து எங்கெங்கும் அவர்களது குரல் ஒலிக்கிறது. வெள்ளம் கட்டவிழ்த்து ஓடுகிறது. குடிக்கத் தண்ணிர் இல்லை. குழைந்தைகளுக்குக் கொடுக்க பாலில்லை.

அனைத்தும் கட்டுக்கள் கொண்டு வர இன்னும் சில மாதங்கள் பிடிக்கும். அரசாங்கம் அவர்களுக்கு உதவுகிறது. மத்திய அரசாங்கம் அவர்களுக்கு உதவுகிறது. பக்கத்து மாநிலங்கள் அவர்களுக்கு உதவுகின்றன. நடிகர்கள் அவர்களுக்கு உதவுகிறார்கள். பொது மக்கள் அவர்களுக்கு உதவுகிறார்கள். ஆனாலும் இது போதாது. உலக மக்கள் அவர்களுக்கு உதவ வேண்டும் என்பதாக திருத்தந்தை ஃபிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.

கேரள மக்களுக்காக நாமும் பிரார்த்திப்போம்!

No comments:

Post a Comment