Sunday 26 August 2018

கேள்வி - பதில் (85)

கேள்வி

மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவர் ஆகிறாரே!

பதில்

ஆச்சிரியப்பட ஒன்றுமில்லை. அக்கட்சிக்கு ஒரே ஒரு தலைவர் தான் இருந்திருக்கிறார். அவர் தான் கலைஞர் கருணாநிதி. அந்தப் பதவியை அவரே உருவாக்கி அவர் இறக்கும் வரை தலைவராக இருந்தவர். சுமார் 50 ஆண்டுகள் அவர் தலைவர்.

இப்போது அவரது மகன் ஸ்டாலின் தலைவராகிறார்.  தி.மு.க. என்பது வெறும் கட்சியாக மட்டும் நாம் பார்க்கக் கூடாது.  கலைஞர் அவரது வாரிசுகளுக்கு விட்டுப்போன சொத்தாகப் பார்க்க வேண்டும். சொத்துகளுக்கு வாரிசுகள் சண்டை வரத்தான் செய்யும். 

கலைஞர் எப்படி ஐம்பது ஆண்டுகள் அந்தச் சொத்துக்களைக் கட்டி காத்தாரோ அதே போல அடுத்து வரும் தலைவரும் அதன் சொத்துக்களைக் கட்டிக்காத்து தனது வாரிசுகளிடம் ஒப்படைக்க வேண்டும். ஸ்டாலின் தலைவராக வந்தால் அவரது வாரிசுகளுக்குத் தான் அந்தச் சொத்துக்கள் போய்ச் சேரும். மு.க.அழகிரி தலைவராக வந்தால் அவரது வாரிசுகள் தான் சொத்துக்களை அனுபவிக்க முடியும்.

அப்படியே வருங்காலங்களில் தி.மு.க. ஆட்சி அமைக்க முடியாமல் போனாலும் பாதகம் ஒன்றுமில்லை.  அமைந்தால் நாட்டை ஆளலாம்! அமையாவிட்டால் கட்சியை ஆளலாம்!  எப்படியோ சொத்துக்கள் வெளியே போகாதவரை எல்லாம் நலமே! 

நாங்கள் ஜனநாயகவாதிகள் என்று சொல்லிக் கொண்டே கட்சியின் ஜனநாயகத்தைக் குழி தோண்டிப்  புதைத்தவர்கள் திமு.க. வினர்! ஜனநாயகத்திற்கும் அவர்களுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை.

கலைஞர் எந்த வழியில் சென்றாரோ அதே வழியைத் தான் அவரது வாரிசுகளும் பின் பற்றுவார்கள்! அதை வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு யாருக்கும் துணிவில்லை! காரணம் அவர்கள் மூதறிஞரின் பிள்ளைகள். அவரைத் தான் பின்பற்றுவார்கள்!

தலைவராக ஸ்டாலினோ, அழகிரியோ தமிழ் நாட்டுக்குப்  பெரிதாக ஆகப் போவது ஒன்றுமில்லை!  அவர்கள் சொத்துக்களுக்காக போராட்டம் நடத்துகிறார்கள்! நாம் ரசிக்கலாம், அவ்வளவு தான்!

No comments:

Post a Comment