Friday 15 March 2019

மீண்டும் ஓர் இடைத் தேர்தல்...!

ஆம்! மீண்டும் ஓர் இடைத் தேர்தல் வந்துவிட்டது.

நெகிரி செம்பிலான், ரந்தோ சட்டமன்ற இடைத் தேர்தல் களை கட்ட ஆரம்பித்துவிட்டது. இந்தத் தொகுதி தொடர்ந்தாற் போல பாரிசான் வெற்றி பெற்று வந்த தொகுதி. அதுவும் ம.இ.கா. வினர் பலர் இங்கிருந்து சட்டமன்றத்திற்கு வந்தவர்கள்.

சென்றமுறை தொகுதி சீரமைப்பு நடந்த போது முன்னாள் மந்திரி பெசார், முகமது ஹாசான் கடந்த 14-வது பொதுத் தேர்தலில் இந்தத் தொகுதியில் நிறுத்தப்பட்டார்.  முன்னாள் மந்திரி பெசார்,  இன்றைய அம்னோ இடைக்காலத் தலைவர், தேசிய முன்னணியின் தலைவர் என்று பன்முகம் கொண்டவர் முகமது ஹாசான். 

பொதுவாகவே ரந்தோ சட்டமன்ற தொகுதி என்பது இந்தியர்களின் தொகுதியாகவே எல்லாக் காலங்களிலும் கருதப்பட்டு வந்தது.  அதிகமான இந்தியர்கள் உள்ள ஒரு தொகுதி.  இன்றைய நிலையில் இந்தியர்களின் வாக்கு வங்கி  27 விழுக்காடும்,   மலாய்க்காரர்கள் 53 விழுக்காடும்,  சீனர்கள் 20 விழுக்காடும்  உள்ளனர்.

இதே தொகுதியில் சென்ற பொதுத் தேர்தலில் பக்காத்தானின் டாக்டர் ஸ்ரீராம் போட்டியிட்டிருந்தால் அவரும் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகியிருப்பார். அப்போது இந்திய வாக்களார்கள் வாழ்வா, சாவா என்னும் மன நிலையில் இருந்தனர். இன்று..?   பக்காத்தான் ஆட்சியைப் பற்றியான விமர்சனங்கள் திருப்திகரமானதாக இல்லை என முணுமுணுக்கப்படுகின்ற வேலையில் இந்தத் தேர்தல் நடபெறுகின்றது. இருந்தாலும் ஒரு வருடமே ஆன நிலையில் பக்காத்தான் அரசுக்கு வாய்ப்பு கொடுத்துத் தான் ஆக வேண்டும் என்பதாகவே இந்தியர்கள் நினைக்கின்றனர்.

அம்னோவின் முகமது ஹாசான் இந்தத் தொகுதியின்  மண்ணின் மைந்தர். ஓரளவு செல்வாக்கோடு திகழ்பவர். நஜிப் செய்த நாச வேலைகளினால் மலாய்க்காரர்களும் பிரிந்து கிடக்கின்றனர். ஆனால் இப்போது அவர்களின் மன நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாமோ எனத் தோன்றுகிறது. 

,முகமது ஹாசான் அம்னோவின் தேசியத் தலைவர் என்று  பார்க்கும்  போது  அம்னோ தரப்பு எப்பாடு பட்டாவது  ரந்தோ தொகுதியை  தக்க  வைத்துக்  கொள்ள  வேண்டும் என நினைப்பது இயல்பு. நிச்சயமாக  அவர்களின்  பெரிய  பெரிய  தலைவர்கள் எல்லாம்   இங்கு வந்து கும்மி  அடிப்பார்கள்!  இனப் பிரச்சனைகளை எழுப்புவார்கள்.  சட்டத்துறை தலைவர் டாமி தோமஸ் ஏன் குர்ரான் மேல் சத்திய பிரமாணம் செய்யவில்லை என்று கேள்விகளைத் தொடுப்பார்கள்!  அம்னோ வெற்றி பெறுவதற்கு  வேறு  வழிகள்  ஏதும்  இருப்பதாகத்  தெரியவில்லை!  இப்போது நடப்பது கிறிஸ்துவர்களின் ஆட்சி என்று சொன்னால் தான் அவர்களுக்கு வாக்குகள் விழும்!

இந்த இடைத் தேர்தலில் டாக்டர் ஸ்ரீராம் கடுமையான போட்டியை எதிர் நோக்குகிறார் என்பது திண்ணம். வெற்றி பெற வாய்ப்புக்கள் உண்டு என்பதையும் மறுப்பதற்கில்லை! யார் வெற்றி பெற்றாலும் குறுகிய வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெறுவர் என்பது நிச்சயம்!

No comments:

Post a Comment