Sunday 24 March 2019

அம்னோவின் அநாகரீகம்...!

நாட்டை, சுததிந்திரம் கிடைத்திலிருந்து கடந்த ஆண்டு வரை நாட்டின் நிர்வாகத்தை தன்னிடமே வைத்திருந்த ஒரு கட்சி. சுமார் அறுபது ஆண்டுகளுக்கு மேல் நாட்டை ஆண்ட ஒரு கட்சி.  மலாய் இனத்தவரிடையே ஈடு இணயில்லாத ஒரு கட்சி என்றால்  அது அம்னோ என்பதில் எந்தக் கருத்து வேறுபாடில்லை. 

கடைசியாக அம்னோ தலைவரா, பிரதமராக இருந்த நஜிப் செய்த தவறினால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதற்குப் பொறுப்பு ஏற்க வேண்டியவர் நஜிப் மட்டுமே!

அவர் செய்த தவறுகளை மறைத்து தனது ஆதரவாளர்களைத்  தூண்டி  விட்டு  நாட்டில் குழப்பத்தை  ஏற்படுத்தும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார் நஜிப்!  இந்நேரம் அவர் சிறைக்குள்ளே  தள்ளப்பட்டிருந்தால் இந்த வேண்டத் தகாத வேலைகள் எல்லாம் இல்லாமல் போயிருக்கும் என்று ஒரு சாரார் சொல்லுவது உண்மை தான்  என்று  நாமும்  நினைக்கத்  தான்  வேண்டியிருக்கிறது.  

அவரைக் கைது செய்வதில் ஏன் தாமதம் என்பதில் நம்மால்  எந்தக் கருத்தையும் சொல்ல முடியாது. அது  நீதிமன்றத்தின் கடமை.  எது சரி, எது தவறு என்பதை நீதிமன்றத்தின் கையில்.

நாட்டிற்குக் கோடிக்கணக்கில் நட்டத்தை ஏற்படுத்திவிட்டு "நான் தவறே செய்யாத ஒரு தலைவன்!" என்று பேசிக்கொண்டிருக்கும் ஒரே தலைவன் என்றால் அது நஜிப்பாகத் தான்  இருக்க முடியும்!

சமீபத்தில் நஜிப்புக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய  ஆர்ப்பாட்டதில் அந்த மாணவர்களை நஜிப்பின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் மிகவும் கண்டிக்கத் தக்கது. மாணவர்களை மட்டும் அவர்கள்  இழிவுபடுத்தவில்லை.  அவர்கள் இனத் துவேஷத்தையும் தூண்டிவிட்டிருக்கின்றனர்.

அப்படி இருந்தும் அவர்களில் யாரும் கைது செய்யப்படவிலை. அதனை   அவர்களின் பலமாக  அவர்கள்  பார்க்கிறார்கள்!   யார் நஜிப்பின் ஆதரவாளர்கள்?  உன்னிப்பாகப் பார்த்தால் எல்லாம் அவரிடம் பொறுக்கித் தின்றவரகள்!  இலஞ்சப் பிரபலங்கள்! அவர் பதவியில் இருந்த போது பணத்தில் மிதந்தவர்கள்! அத்தனை பேரும் தேச நிந்தனை சட்டதில் கைது செய்யப்பட  வேண்டியவர்கள்!

ஆனாலும் அரசாங்கம் பொறுமை காக்கிறது! அவர்களை இன்னும் வெளியே விட்டு வைத்திருக்கிறது!

அறுபது ஆண்டுகாலம் அரசாங்கத்தை வழி நடத்திய ஒரு கட்சி இப்போது அராஜகத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது!  

வருத்தமே!

No comments:

Post a Comment