Thursday 21 March 2019

அரசாங்க கல்லுரிகளே சிறந்தது..!

பரிட்சைகளில் வெற்றி பெற்ற மாணவர்கள்  இந்நேரம் பலர் கல்லுரிகளுக்கும் பல்கலைக்கழகங்களும் விண்ணப்பங்கள் போட்டுக் கொண்டு இருப்பார்கள்.

வசதியான மாணவர்கள் வெளிநாடுகளுக்கோ அல்லது வெளி நாட்டுக் கல்லூரிகளுக்கோ விண்ணப்பங்களை அனுப்பிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் சிலராகத்தான் இருப்பார்கள்.  ஆனால் பெரும்பாலும் ஏழை, நடுத்தர குடும்பங்களைச் சார்ந்த இந்திய சமூகம் உள் நாட்டுப் பல்கலைக்கழகங்களில் சேரத்தான் அதிக அக்கறைக் காட்டுவார்கள். அப்படி இடம் கிடைக்கவில்லை என்றால் மட்டுமே உள் நாட்டில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்ககில் சேர முயற்சி  செய்வார்கள். 

 பொதுவாக  தனியார் கல்வி நிலையங்களின் கட்டணங்கள் என்பது சாதாரண விஷயம் அல்ல.  ஏழைகளுக்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாத கல்வி கட்டணங்கள்!  என்னசெய்வது?  பிள்ளைகள் படிக்க வேண்டுமென்பதால் தங்களது வீட்டுமனைகளை விற்று , சேமநிதி, உற்றார் உறவினருடன் கடன்  என்று பல்வேறு தரப்பிலிருந்து  கடன் பட்டுப் பிள்ளைகளைப் படிக்க வைக்க தங்களால் இயன்றதைச்  செய்கிறார்கள்.

நான் தனியார் கால்லூரிகளின் மேல்  நல்ல  எண்ணம் இல்லாதவன். அவர்களின் பள்ளிக் கட்டணங்களை  ஏற்றுக் கொள்ளாதவன்.  என்ன தான் புகழ் பெற்றக் கல்லுரிகளில் படித்தாலும்  அரசாங்க  வேலை என்னும் போது  அந்தக் கல்லுரிகளின் பட்டங்களை  அரசாங்கம்   பொருட்படுத்துவதில்லை.  அரசாங்க கல்லூரிகளின்  பட்டங்களைத்  தான்  அவர்கள்  ஏற்றுக் கொள்ளுகிறார்கள்.

இந்த நிலையில்  தனியார் கல்லூரிகளில் படிப்பவர்கள் படிக்கட்டும்.  சீனர் நிறுவனங்கள் தனியார் கல்லுரிகளில் படிப்பவர்களைத் தான் ஏற்றுக் கொள்ளுகிறார்கள்.  அது  தரமான கல்வி, ஆங்கிலம் பேச முடியும் என்பது தான் அவர்களின் அளவுகோள். இந்திய பட்டதாரிகளைச் சீன நிறுவனங்கள் ஏற்றுக் கொள்ளுவதில்லை என்பதாகப் பரவலாக பேசப்படுகிறது. அதற்காக சீன மொழித் தேவை  என்பதாக தங்களது விளம்பரங்களில் ஒன்றைச் சேர்த்துக்  கொள்ளுகிறார்கள்.  அதனால்  நமது  மாணவர்கள்  பல வழிகளில்  அடிபடுகிறார்கள்.  அரசாங்கம் என்றால் மலாய் இனத்தவர், தனியார் துறை என்றால் சீன இனத்தவர்.  இந்த நிலையில் அரசாங்க கல்லூரிகளில் படித்தால் ஏதோ ஒரு சில இடங்களாவது வேலை செய்ய நமக்கு வாய்ப்புண்டு.

பணம் உள்ளவர்களைத் தவிர மற்றவர்கள் முடிந்த வரை அரசாங்க கல்லூரிகளையே நாடுங்கள். அதுவே சிறந்தது.  இடம் கிடைக்கவில்லை என்று ஏமாந்து விடாதீர்கள்.  முன்பை விட கூடுதலான இடங்கள் இப்போது கிடைக்கும் என நாம் நம்பலாம்.

இனி உங்களுடைய தேர்வு அரசாங்க கல்லூரிகளாக இருக்கட்டும். நாம் அறிவுள்ள சமுதாயாம் அதனை மறந்து விடாதீர்கள்.

No comments:

Post a Comment