Saturday 16 March 2019

கையெழுத்திலும் ஒரு சாதனை...!

பொதுவாக நம்முடைய கையெழுத்தின்  மேல் நமக்கு நல்ல அபிப்பிராயம் இருப்பதில்லை! நமது கையெழுத்து நன்றாக அமைய வேண்டுமென்று நாம் அக்கறை எடுப்பதில்லை! என்னவோ எழுத வேண்டும், எழுதித் தோலைவோம் என்று நினைப்பது தவிர வேறு எதுவும் நமது கவனத்திற்கு வருவதில்லை!

ஆனால் நேப்பாளத்தைச் சேர்ந்த ப்ராகிரிட்டி மல்லா என்னும் பெயருடைய, எட்டாம் வகுப்பு படிக்கும் பதினான்கு வயது பள்ளி மாணவி தனது கையெழுத்திலும் ஒரு சாதனையைச் செய்திருக்கிறார். அழகான, முத்து முத்தான கையெழுத்தின் மூலம் பலரின் கவனத்திற்கு வந்திருக்கிறார்.  அந்த கையெழுத்து கையால் எழுதப்பட்டதா அல்லது  தட்டச்சு செய்யப்பட்டதா என்று கணிக்க முடியாத அளவுக்கு அவரின் கையெழுத்து அமைந்திருக்கிறது.

சிறப்பான கையெழுத்து மூலம் பல பரிசுகளும்வென்றிருக்கிறார். நேப்பாள அரசாங்கமே அவருக்குப் பரிசுகள் கொடுத்து அவரைக் கௌரவித்திருக்கிறது.

ஒரு காலக் கட்டத்தில் நமது பள்ளிகளிலும் கையெழுத்துச் சிறப்பாக அமைய  ஒரு தனிப் பாடமே எடுக்கப்பட்டது.   என்னைப் போன்றவர்கள் அதிலும் கூட தேர்ச்சி பெற முடியாமல் தடுமாறினோம்!

சிறப்பான கையெழுத்து மூலம் இப்போது ப்ராகிரிட்டி உலக அளவில் புகழ் பெற்று விட்டார்! வலைத்தளங்கள் மூலம் பிரபலமாகி விட்டார்! உலகிலேயே சிறந்த கையெழுத்தைக் கொண்டவர் என்னும் பெயரையும் தட்டிக் கொண்டார்! அவருடைய கையெழுத்தைப் பார்த்தால் வருங்காலத்தில் நல்ல வெற்றிகரமான மாணவியாக வருவார் என நம்பலாம். 

இவருடைய தலையெழுத்தே  அவருடைய கையெழுத்துத்  தான்!


No comments:

Post a Comment