Sunday 30 May 2021

இது தொடர்வது நல்லதல்ல!

இன்றைய நிலையில் நாம் ஒரு சில துறைகளில் முன்னேற்றம் அடைந்திருக்கிறோம் என்பது உண்மை தான்.

ஆனால் அடிமை வேலைகளில் நாம் முன்னேறிய அளவுக்கு நமது சொந்த தொழில்களில் முன்னேறாதது தான் மிகவும் வருத்தத்திற்குரியது

நமது இந்திய சகோதரர்களான குஜாராத்தியர்களை எடுத்துக் கொள்ளுவோம் கல்வியிலும் முன்னேறியிருக்கிறார்கள். அதே சமயத்தில் தங்களது பாரம்பரியமாக செய்து வரும் தொழில்களிலும்  முன்னேறியிருக்கிறார்கள்.

ஆனால் நாம் கல்வியை மட்டுமே சிந்திக்கிறோம். கல்வி கற்றுவிட்டால் நாம் பணம் உள்ளவனாக ஆகிவிட முடியாது. கல்வி உங்களுக்கு ஒரு வேலை வாய்ப்பை ஏற்படுத்துமே தவிர பணத்தை அள்ளித் தராது என்பது தான் கவனித்தக்கது.

நமக்குக் கல்வியும் வேண்டும் அதே போல தொழில்களும் வேண்டும். அது தான் நம்மை பொருளாதாரா வலிமை கொண்ட சமூகமாக மாற்றி அமைக்கும். அது குஜாராத்தியரிடம் உண்டு.   தமிழர்களும் அப்படித்தான் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஏன் நாம் காலமெல்லாம் வேலை செய்து பிழைக்கும் சமூகமாகத் தான் வாழ வேண்டுமா? அப்படி எல்லாம் நமது முன்னோர்கள் எழுதி வைத்து விட்டா போயிருக்கிறார்கள்? அப்படி ஒன்றும் இல்லை. சொல்லப் போனால் திருவள்ளுவர் பெருந்தகை மிகவும் மென்மையான போக்கு உடைய அவரே  "செய்க பொருளை!" என்று தமிழர்களைப் பார்த்து ஆணையிடுகிறார் என்பதாகச் சொல்லுகிறார் பேச்சாளர் சுகி சிவம் அவர்கள்! வேறு தமிழ் இலக்கியங்கள் இந்த அளவு பொருள் செய்வதற்காக அழுத்தம் கொடுக்கவில்லை என்கிறார்.

அப்படி என்றால் பொருள் ஈட்டுவது என்பது எத்துணை முக்கியம் என்பதை ஏன் நாம் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. ஆயிரம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கப்பலில் பயணம் செய்து வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் தானே நாம். அந்த பரம்பரையில் வந்த நமக்கு இப்போது ஏனோ நம்மை பயம் ஆட்டிப் படைக்கிறது! நாமும் ஆடுகிறோம்.  

இப்போது  நமது பாரம்பரியம் மீட்டு எடுக்கப்பட வேண்டும். அது ஒவ்வொரு தமிழரின் கடமை. நாம் ஏன் என்றென்றும் அடிமை வேலைகளில் ஈடுபட்டு குறைவாக  பொருள் ஈட்ட வேண்டும்?

சிந்திப்போம். மீண்டும் பொருளாதாரம் நமது பக்கம் திரும்ப வேண்டும்.


No comments:

Post a Comment