Thursday 27 May 2021

வலிமை வாய்ந்த சமூகம்


நமது சகோதர இனமான சீன சமுகத்தைப் பற்றிப் பேசும் போது  ஒரு விஷயத்தை நாம்  தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

சீனர்கள் எல்லாத் துறைகளிலும் முன்னேறி இருக்கின்றனர் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

வழக்குரைஞர்கள் என்றாலே அது இந்தியர்கள் தான் என்று சொல்லப்படுவதுண்டு.  அவர்கள் நீதிமன்றங்களில் காணப்படுவது குறைவாக இருக்கலாம் ஆனால் அவர்கள் பெரும்பாலும் வர்த்தகத்துறையினரைச் சார்ந்து இருக்கிறார்கள். ஆலோசனைகள்  கொடுப்பது, வழிகாட்டுதல் போன்றவை அவர்களது பணியாக இருக்கும்.

மருத்துவத்துறையில் அவர்களை அதிகமாகக் காண முடிகிறது. இன்று பெரும்பாலான கிளினிக்குகள் அவர்களுடையவை. அதுவும் குறிப்பாக நிபுணத்துவம் என்பது அவர்கள் கையில்.  இன்று எதைனை எடுத்துக் கொண்டாலும் மருத்துவத் துறையில் அவர்கள் தான் நிபுணர்களாக இருக்கிறார்கள்.

கணக்கியல் துறை என்றாலும் அவர்களே முன்னணியில் நிற்கின்றனர். இன்று பெரும்பாலான நிறுவனங்கள் அவர்களை நம்பியே இருக்கின்றன. பல பெரும் நிறுவனங்களில் அவர்களே அதிகம் பங்கு பெற்றிருக்கின்றனர்.

இப்படி எதனை எடுத்துக் கொண்டாலும் அவர்கள் இல்லாத துறைகள் என்று எதுவும் இல்லை. அந்த அளவுக்கு  அவர்களின் உச்சத்தை தொட முடியாத அளவுக்கு நமக்கும் அவர்களுக்கும் பெரும் இடைவெளி உள்ளது! அதனால் நான் நம்மை குறைத்து மதிப்பிடவில்லை என்பதையும் அறிந்து கொள்க.

இவற்றை நான் ஏன் பட்டியல் இட்டிருக்கின்றேன் என்றால் இவ்வளவு இருந்தும், எல்லாத் துறைகளிலும் அவர்கள் பேர் போட்டிருந்தாலும், நாம் அவர்களைப் பற்றி பேசும் போது அவர்களை எப்படிக் குறிப்பிடுகிறோம். அதைத்தான் நான் சொல்ல வருகிறேன். 

எத்தனையோ சாதனைகள் அவர்களிடமிருந்தும் நாம் அவர்கலைப்பற்றி பேசும் போது  "சீனர்கள் பணக்காரர்கள்!" என்கிற ஒரே வார்த்தையில் சுருக்கி விடுகிறோம்! மற்றவைகளைப் பற்றியெல்லாம் நாம் கவலைப்படவில்லை. பணம் மட்டும் தான் நம் முன் நிற்கிறது! பணம் இருந்ததால் தான் அவர்களால் இந்த அளவுக்கு உயரமுடிந்திருக்கிறது என்பதும் உண்மை.

ஆனால் சீனர்களிடம் எத்தனையோ பண்புகள் இருந்தும், திறமைகள் இருந்தும் அவைகள் எல்லாம் மறக்கடிக்கப்படுகின்றன. ஒன்றே ஒன்று தான் நமது ஞாபகத்திற்கு வருகின்றது. அது தான் பணம்.

உலகில் ஒரு சில இனத்தினரை நினைத்தாலே  நமக்கு வருவதெல்லாம் பணம் தான். யூதர்கள் என்றாலே பணம் தான் ஞாபகத்திற்கு வருகிறது. அவர்கள் தான் உலகில் உள்ள பல தொழில்களுக்கு சொந்தக்காரர்கள். இன்று சீன நாடு மற்றவர்களை விட பொருளாதாரத்தில் மிகவும் சக்தி வாய்ந்த நாடாக வலம் வருகிறது என்றால் அதற்குப் பணம் தான் காரணம். பணத்தை வைத்துக் கொண்டு பல நாடுகளை சீனா தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. ஏன்? அடிமையாக வைத்திருக்கிறது என்று கூட சொல்லலாம்.

பணம் வலிமை வாய்ந்தது. அதனால் தான் சீனர்களைப் பற்றிப் பேச பலர் பின் வாங்குகின்றனர்.  இந்தியர்களைப் பற்றிப் பேசும் ஜாகிர் நாயக் அவரது சிஷ்யரும் சீனர்களைப் பற்றிப் பேச முடிகிறதா?

சீனர்கள் வலிமை வாய்ந்த சமூகம். அதற்குக் காரணம் பணம்!

No comments:

Post a Comment