கோலகுபுபாரு இடைத்தேர்தல் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது!
இந்தத் தேர்தலில் பக்காத்தான் கூட்டணிக்கு மலாய் மக்களின் ஆதரவு கூடி இருக்கிறதாம். அதாவது பிரதமர் அன்வாருக்கான ஆதரவு கூடி வருகிறதாம்.
வாக்களிப்பதில் மலாய் மக்கள் முனைப்புக் காட்டியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. சீன வாக்காளர்கள் எப்போதுமே ஜ.செ.க. ஆதராவளர்கள். இந்திய வாக்களர்கள் எங்கே பின் தங்கி விடுவார்களோ என்று சீனர்களின் கூட்டம் கூடுவதில் வியப்பு ஏதுமில்லை! இந்தியர்களின் வாக்கு இன்னும் ஏனோதானோ நிலையில் தான்! அது அவர்களின் குற்றமல்ல. காலங்காலமாக ஏமாற்றப்பட்ட ஒரு சமூகம் அப்படித்தான் இருக்கும்.
நமது அபிப்பிராயங்கள் எப்படி இருப்பினும் ஒன்றை நாம் மறந்துவிடக் கூடாது. செய்ந்நன்றி கொன்றவருக்கு உய்வில்லை! அந்தத் தொகுதியில் உள்ள அங்குள்ள மக்களுக்கு சுமார் 245 வீடுகள் கட்டிக்கொடுக்க உறுதி அளித்திருக்கும் போது நாம் ஏன் எதிர்கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். எதிர்கட்சியால் ஒரு செங்கல்லைக் கூட தூக்கிவைக்க முடியாது! ஏன் ஆளுங்கட்சியாக இருந்த போது கூட ம.இ.கா.வால் ஓரு ஆணியைக் கூட புடுங்க முடியவில்லையே!
கோலகுபுபாரு மக்கள் நல்ல தெளிவான முடிவை எடுத்திருக்கிறார்கள். அதுவும் இந்தியர்கள் பாராட்டுக்குரியவர்கள். அவர்களின் ஆதரவு தக்க சமயத்தில் ஒற்றுமை அரசாங்கத்திற்குக் கைகொடுத்திருக்கிறது. அவரகளது கோரிக்கைகள் அனைத்தும் தொகுதியைச் சார்ந்தவை.
இப்போது நாம் ஒரு சவால் விடுகிறோம். தேர்தல் பிரச்சாரத்தின் போது அத்தனை தலைகளும் இந்தியர்களின் காலில் விழுந்தீர்களே அதனை அப்படியே போய் பிரதமர் காலில் விழுந்து இந்தியர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க வழிவகைக் காணுங்களேன்! ஏன்? இன்னும் அடுத்த தேர்தல்வரை காத்திருக்கப் போகிறீர்களோ? நீங்கள் ஒன்றும் செய்யவில்லையானால் இப்போதே நான் உங்களுக்காக அனுதாபப்படுகிறேன். காரணம் இந்திய இளைஞர்கள் இனி உங்களைச் சும்மா விடப்போவதில்லை!
No comments:
Post a Comment