Sunday 10 September 2023

எதிர்காலம் உண்டா?

 

மூடா கட்சியின் தலைவர் சைட் சாடிக் எந்த பாதையை நோக்கி நகர்கிறார்  என்று அவருக்கும் தெரியவில்லை அவரது கட்சியினருக்கும் தெரியவில்லை!

சைட் சாடிக் ஒர் அரசியல் தலைவருக்கு உள்ள எல்லாப் பண்புகளும்  உள்ளவர்.  பிரச்சனை என்னவென்றால் பொய்யும் புனைவும் உள்ள அரசியலில் எந்த நற்குணமும் தேவை இல்லை!  இது தான் நடப்பு அரசியல். அதனைப் புரிந்து கொள்ளாமல்  அவர் தனியாக ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து  அதன் வழியில் போகிறார்.

ஓர் அரசியல் கட்சியைத் தோற்றுவிப்பது  என்பது மிக எளிதான வேலை. ஆனால் அதனை வழிநடத்தி வளர்ப்பது என்பது சாதாரண வேலை அல்ல முதலில் அவருக்கு அந்த ஆற்றல் இருக்கிறதா என்பதும் புரியவில்லை.

நம் நாட்டு அரசியலில் எத்தனையோ கட்சிகள் உருவாகி இருக்கின்றன. ஆனால் தலை நிமிர முடியவில்லை. முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின்  இப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார். அவரது கட்சி வளர்வதற்கு  அவர் அப்படி ஒன்றும்  பெரிதாக  செய்துவிடவில்லை.  ஏற்கனவே இருந்த அம்னோ கட்சியை அப்படியே அவ்ர் மாற்றிக் கொண்டார்.   அவர்கள் எல்லாம் எப்படி என்பது நமக்குத் தெரியும். திருடர்கள், கொள்ளைக்காரர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தார்கள்.  கட்சி உருவாயிற்று.

ஆனால் சைட் சாடிக் அப்படியா? இப்போது உள்ள நிலைமையை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.  பணத்தைக் கொட்டாமல் கட்சியை வளர்க்க வாய்ப்பில்லை. பணத்தைக் கொட்டுகிற அளவுக்கு அவரிடம் பணம் இல்லை.  மேலும் அவர் அதனை விரும்பவுமில்லை. அவருடைய கொள்கை, கோட்பாடு எல்லாம் காற்றில் பறக்கவிட அவர் தயாராக இல்லை!

பொய்,  பணம் கையாடல் செய்வது, மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிப்பது - இது தான் இன்றைய அரசியல். இந்த சூழலில் அவரால் எப்படி ஒரு கட்சியை வளர்க்க முடியும்?  ஏன்? அவருடைய இளைஞர் படையே  பணம் இல்லாமல் நகருமா? 

இப்போது அவர் எதிர்க்கட்சி வரிசையில் உட்கார்ந்தாலும் அரசாங்கம் மக்களின் நலனுக்காக கொண்டு வருகின்ற நல்ல திட்டங்களை ஆதரிப்பார் என நம்பலாம்.  அந்த அளவுக்கு மக்களின் ந்லன் விரும்பி  என்று அவரைச் சொல்லலாம்.

சைட் சாடிக் நல்ல தலைவர். நல்ல இளைஞர். நமது நாட்டின் நம்பிக்கை நட்சத்திரம்.   இந்த அரசியலுக்கு இவர் பொருந்துவாரா என்பதைப் பொறுத்திருந்து தான்  பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment