Monday 4 September 2023

கலவரத்தில் இன்பம் காண்பவர்!

 

நம் நாட்டில் இனவாதத்தை  தோற்றுவித்தவர் என்றால் அது டாக்டர் மகாதிர் தான்.!

அரசியலுக்கு வரும்போதே இனவாதத்தைப்  பேசித்தான் அவர் அரசியலுக்கு வந்தார்.  அது கலவரத்தில் முடிந்தது. அதுவே அவருக்கு வெற்றியாக முடிந்தது.

நாட்டை அவர் தான் 22 ஆண்டு காலம் வழி நடத்தியவர். அதன் பின்னர் 22 மாதங்கள் அவர் தான் பதவியில் இருந்தவர்.  இப்போது என்னவோ பதவியே வகிக்காதவர் என்கிற தொனியில் பேசிக் கொண்டிருக்கிறார்.

அவர் ஆட்சியில்  இருந்த காலத்தில் தாய் மொழிப்பள்ளிகள் இருக்கத்தான் செய்தன. அந்த காலகட்டத்தில் எந்த ஒரு இன பிரச்சனையோ அல்லது மத பிரச்சனையோ இருந்ததாக எந்தத் தடையமும் இல்லை.

எதையாவது காரணங்கள் சொல்லி  இனங்களிடையே பதற்றத்தை ஏற்படுத்துவதே இவர் பாணி அரசியல் என்பதை நாம் அறிவோம். இப்போதும் அதைத்தான் செய்கிறார்.  அவரின் வயதின் காரணமாக அவர்மீது  யாரும் கைவைக்க முடியாது என்பதை அவர் அறிவார். அதனால் தான் அவர் "நீ முன்னால போனாலும் பின்னால போனாலும் உதைத்துக்  கொண்டே தான் இருப்பேன்!"  என்று ஆணவத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்! அதுவும் பிரதமர் அன்வார் பெரியவர்களை மதிப்பவர். அதனால் அவரது பேச்சுக்களைப் பிரதமர்  பொருட்படுத்துவதில்லை. ஆனால் டாக்டர் மகாதிர் பதவியில் இருந்து இப்படி ஒருவர் செயல்பட்டால் அத்தோடு அவரின் அரசியல் எதிர்காலம் கேள்விக் குறியாகிவிடும்! அவருக்கு வயதெல்லாம் ஒரு பொருட்டல்ல!

டாக்டர் மகாதிரை எப்படித் தான் புரிந்து கொள்வது?கலங்கிய குட்டையில் மீன் பிடித்து அப்படியே கைகளில் அவைகளை நெரித்துக் கொல்லுபவர்! பாவ புண்ணியம் என்று எதுவும் இல்லாத ஒரு பாவப்பட்ட ஜென்மம். பழிவாங்கும் சுபாவம் அப்போதும் உண்டு. இப்போதும் உண்டு. தன்னைத்தவிர வேறு யாரும் முன்னேறி விடக்கூடாது  என்கிற எண்ணம் எப்போதும் உண்டு.

அதனால் தான் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் அவரைப் பார்த்து                    "தாத்தா! போதும்!  ஓய்வெடுங்கள்!"  என்று கிண்டலடித்திருக்கிறார்!  அது நஜிப்  அவர்களின் கருத்தாக இருந்தாலும், உண்மையில், அது ஒட்டுமொத்த மலேசியர்களின் கருத்து என்பதாகத்தான்  எடுத்தக் கொள்ள வேண்டும்! ஏன் நாமும் அப்படித்தானே நினைக்கிறோம்! "இந்தக் கிழவனுக்கு என்ன வேலை!" என்று அவர் சம்பந்தமான செய்திகளைக் கூட படிப்பதில்லையே!. வர வர அவர் மேல் இருக்கும் மதிப்பும்,  மரியாதையும்  இல்லாமல் போய்விட்டதே! நம் வீடுகளில் இருக்கும் "தொண! தொண!" தாத்தா பாட்டிகளை நாம் என்ன பாடுபடுத்துகிறோம்!  அப்படி ஒரு நிலைக்குத் தான் அவர் வந்துவிட்டார்!

சரி! நாமும் "தாத்தா! போதும் ஓய்வெடுங்கள்! நீங்கள் ஊருக்கே தாத்தா" வேறு நாங்கள் என்ன தான் சொல்ல முடியும்!

No comments:

Post a Comment