Thursday 28 September 2023

கூட்டரசு பிரதேச தமிழ்ப்பள்ளிகள்

 

பத்து தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன்  கூட்டரசு பிரதேச தமிழ்ப்பள்ளிகளின் நிலவும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண சிறப்புக்குழு ஒன்றை  அமைத்திருப்பதாகக் கூறியுள்ளார்.

நாம் இதில் திருப்தியடையவில்லை என்றாலும்  ஒற்றுமை அரசாங்கத்தில் நமது  இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆடாமல் அசையாமல் இருக்கும் நேரத்தில்  இவராவது 'நானும் இருக்கிறேன்! மறந்துவிடாதீர்கள்!' என்பது போல இடைஇடையே அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்! அதற்காகவாவது  அவரைப் பாராட்டத்தான் வேண்டும்!

சமீப காலங்களில் நாம் கூர்ந்து கவனிக்கும்போது ஒன்றை மட்டும் அனைத்து அரசியல்வாதிகளும் தவறாமல்  குறிப்பிடுகின்றனர். அதாவது தமிழ்ப்பள்ளிகளைப் பழுதுபார்ப்பது, நூல்நிலையம் அமைப்பது,  இடப்பற்றாக்குறையினால் பள்ளிகளை விரிவாக்கம் செய்வது  போன்ற முக்கிய பிரச்சனைகள் அனைத்தும் செய்வது என்பது கல்வி அமைச்சின் கடமை.

ஆனால் நமது ஒய்பிகளோ  மித்ராவத்தான் குறிவைக்கின்றனர். கல்வி அமைச்சுக்குச் செல்வதைவிட மித்ரா இன்னும் எளிதாக அணுகலாம் என்கிற காரணமாக இருக்க வேண்டும்.

மித்ரா பள்ளிகளைப் பழுதுபார்க்கும் வேலைகளைக்காக  உருவாக்கப்பட்டது அல்ல. இந்தியர்களின் உருமாற்றத்திற்காக உருவாக்கப்பட்டது.  நமது அரசியல்வாதிகள் அதனை இப்போது உருமாற்றி  அதன் பாதையை மாற்றுகிறார்கள்!  அதனை நாம் தவறு என்று சொல்லவில்லை.இதைத்தான் நாங்கள் செய்வோம் என்றால்  இப்போது அரசாங்கம் கொடுக்கும் நிதி உதவி போதாது என்பது தான் உண்மை. அதனைக் குறைந்தபட்சம் நூறு கோடியாகவாவது ஒதுக்க வேண்டும்.  இது முடியாத காரியம் அல்ல. முடியக் கூடியது தான்.

நாம் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் செய்யும் - செய்கின்ற  - நல்ல காரியங்களுக்காகப் பாராட்டுகிறோம். ஆனால் இது வெறும் ஏதோ ஓர் அறிக்கை விட்டோம் என்கிற போக்கில் போய்விடக் கூடாது. சொன்னவை அனைத்தும் செயல்படுத்தப்பட வெண்டும். அவர் சொல்லுகின்ற அனைத்துத் திட்டங்களும் செய்யமுடியாதது அல்ல. அனைத்தும் செயல்படுத்தௌக்கூடியவை தான்.

இந்த ஒய்பி அனைத்தையும் செயல்படுத்துவார் என நன்புகிறோம்!

No comments:

Post a Comment