Saturday 31 July 2021

மீண்டும் மீன் நழுவுமா!

 பிரதமர் முகைதீன் யாசினைப்  பற்றி பேசும் போது ஒரு விஷயம் ஞாபத்திற்கு வருகிறது. "கழுவுற மீன்ல நழுவற மீன்"  தான் நமது பிரதமர்!

அவர் எப்போது ஆட்சி பொறுப்பேற்றாரோ அன்றிலிருந்து அவரது  நடவடிக்கைகளை விமர்சிக்கும் போது மேலே சொன்ன பழமொழி தான் முன் நிற்கிறது!

நெருக்கடி வந்த பொழுதெல்லாம் அவர் எத்தனையோ தந்திரோபாயுங்கள் அவருக்குக் கை கொடுத்திருக்கின்றன. இந்த முறை மட்டும் என்ன அவர் புறமுதுகு காட்டியா ஓடப்பொகிறார்? அது நடக்கும் காரியம் அல்ல!

ஆக, கடைசியாக நடந்தது என்ன? அவசரகால சட்டத்தை இரத்து செய்யுமாறு மாமன்னருக்கு  அதாவது நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னதாகவே அறிவுரை வழங்கியதாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டிருக்கிறது. ஆனால் அரண்மனையோ அது நாடாளுமன்றத்தில சமர்ப்பிக்கப்பட்டு,  வாக்கெடுப்புக்கு விட வேண்டும் என்பது தான் மாமன்னரின் விருப்பமாக இருப்பதாக அறிவிக்கிறது.. அதனை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை. நாங்கள் செய்ய வேண்டியதை செய்து விட்டோம் என்பது தான் அரசாங்கத்தின் நிலைப்பாடு.

அடுத்து என்ன நடக்கும்? மாமன்னர் தனது கட்டளையை முகைதீன் அரசாங்கம் ஏற்காதது அவருக்குச் சினத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முகைதீனோ இதற்கெல்லாம் அசராத மனிதர்!  அவர் பிரதமராக எப்போது பின் கதுவு வழியாக வந்தாரோ அன்றிலிருந்து இந்நாள் வரை அவர் யாரையும் மதித்தாகத் தெரியவில்லை! இனி மேலும் அவர் மதிப்பார் என்றும் சொல்லுவதற்கில்லை! சினம் என்ன மாமன்னருக்கு மட்டும் தானா பொது மக்கள் அனைவரின் சினமும் முகைதீன் மேல் இருக்கிறது!

திங்கள் கிழமை நடைபெற திட்டமிடப்பட்டிருக்கும் நாடாளுமன்ற கூட்டம் நடைபெறுமா என்கிற சந்தேகமும் இப்போது எழுந்திருக்கிறது. நாடாளுமன்றத்தைச் சேர்ந்த 11 பேருக்கு கோவிட்-19 ஏற்பட்டிருப்பதைக் காரணம் காட்டி கூட்டம் இரத்து செய்யப்படலாம்! எதுவும் நடக்கலாம்! அல்லது பிரதமர் முகைதீன் தன் மேல் எந்தக் குற்றமுமில்லை என்று சொல்லி  இதற்கெல்லாம் காரணம் சட்டத்துறை அமைச்சர் தாக்யூடீன் ஹாசன் தான் என்று அவர் மீது பழிபோட்டுத்  தப்பிக்கப் பார்க்கலாம்! எதுவும் சாத்தியம்! இதுவும் சாத்தியம்!

முகைதீன் யாசின் பிரதமர் பதவியை விட்டு விலகுவார் என்கிற பேச்சுக்கே இடமில்லை! பொறுத்திருந்து பார்ப்போம்!

மீன் நழுவும்!

No comments:

Post a Comment