Monday 13 February 2023

இது எந்த வீட்டு நியாயம்?

 

தேசிய ஹாக்கி விளையாட்டு வீராங்கனை ஹானிஸ் நாடியா ஓன் சமீபத்தில்  தேசிய விளையாட்டிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட செய்திகள் நம்மைத் திணறிடத்தின. பத்திரிக்கைகள் அமர்க்களப்படுத்தின!

"ஆ! ஐயோ!" என்று ஹாக்கி கூட்டமைப்பும்  கூட அவரைப் பொளந்து  தள்ளியது!  நமக்கு அதில் பெரிய மகிழ்ச்சியெல்லாம் ஒன்றுமில்லை. ஒரு விளையாட்டு வீராங்கனையின் எதிர்காலம் இப்படி பாழாகிவிட்டதே என்கிற  அனுதாபம் நமக்கு உண்டு. 

  இப்போது மீண்டும் ஒரு செய்தி.  ஆனால் இந்த முறை பெரிதாக ஒன்றும் தம்பட்டம் அடிக்கப்படவில்லை.  ஊடகங்கள் மறைத்துவிட்டன.

அப்படி என்ன தான் நடந்தது? அவர் இனி விளையாட முடியாது என்கிற அறிவிப்பு வந்த சில மணி நேரங்களுக்குப் பின்னர்  அவர் நெகிரி செம்பிலான் மாநிலத்திற்காக விளையாடியதாக செய்திகள் கசிந்திருக்கின்றன!

நமது கேள்வி எல்லாம் அதிகாரத்தில் உள்ளவர்கள் தொடர்ந்து இந்திய சமூகத்தை ஏமாற்றும் வேலையை இன்னும் விடவில்லையா என்பது தான். ஒரு பக்கம் தடை என்பதாக தடபுடலான அறிவிப்பு! இன்னொரு பக்கம் இன்னொரு மாநிலத்தில் சிவப்புக்கம்பள வரவேற்பு! அது ஏன் என்பதற்கான விளக்கம் சீக்கிரம் வரும்!  எதிர் பார்க்கலாம்!

இதைத்தான் நாம் இரட்டை வேடம் என்கிறோம். இதனையே ஓர் இந்திய விளையாட்டாளர் என்றால் என்ன நடந்திருக்கும் என்பதை யோசித்துப் பார்க்கிறோம். அப்போது சட்டங்கள், நியாயங்கள் எல்லாம் தவறாமல் கடைப்பிடிக்கப்படும் என்பதில் ஐயமில்லை! சட்டங்கள் நமக்கு மட்டும் தான் என்பது தெளிவாகத் தெரிகிறது!

இதனை ஒரு முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டால் வருங்காலங்களிலும் இந்த முன்னுதாரணம் தொடர்ந்து கடைப்பிடிக்க  வேண்டிய கட்டாயம் வரும். வேறு வழியில்லை!

நம்முடைய கவலையெல்லாம் இப்படி ஒரு சூழல் ஏற்படும்போது விளையாட்டாளர்கள், எந்தவொரு ஒழுங்கு முறையும் இல்லாமல் தங்களது விருப்பதிற்கு ஏற்ப நடந்து கொள்ள வாய்ப்புகள் அதிகம். அவர்கள் விருப்பத்திற்கு வருவார்கள், போவார்கள் அதிலும் விளையாட்டில் கொஞ்சம்  திறமை ஏற்பட்டுவிட்டால் தலைகனமும் அதிகமாகிவிடும்.`

இது எப்படி, ஏன் நடந்தது என்று நம்மால் யூகிக்க முடியவில்லை. ஆனாலும் செய்திகள் கசியும்.  அப்போது தான் என்ன நடந்தது என்பது தெரியவரும். அதுவரை "எனக்கு ஒரு நீதி, உனக்கு ஒரு நீதியா?"  என்கிற கேள்வி தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்! பொறுத்திருப்போம்!

No comments:

Post a Comment